states

தமிழ்நாட்டை ஏற்க மறுக்கும் ஆளுநருக்கு சிபிஎம் கடும் கண்டனம்

மதுரை,ஜன.6- தமிழ்நாடு என்பதை ஏற்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றே அழைக்க வேண்டும் என்று ஆளுநர் பேசியுள்ளது கடும் கண்டனத்துக்குரியதாகும். காசி - தமிழ் சங்கமம் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட யுக்தியான ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் இறுதியாக ஆளுநர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் இதை பேசி யுள்ளார். அதே பேச்சில் தமிழ்நாட்டின் தனித் தன்மை குறித்த எரிச்சலையும் வெளிப்படுத்தியிருக் கிறார். தமிழ்நாடு உள்ளிட்டு மொழிவழி தேசிய உரி மையை மறுதலித்து, ஒற்றை இந்தியாவை உரு வாக்கும் ஆர்.எஸ்.எஸ். திட்டம் எடுபடவில்லையே என்ற ஆத்திரமே அவர்  பேச்சின் அடிநாதமாகும். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பாதகமில் லாமல் அதன் செயல்பாட்டை வலுப்படுத்துவதைத் தான் ஆளுநர் செய்ய வேண்டும். ஆனால் அந்த வேலையைக் கூட தாமதப்படுத்தி 20-க்கும் மேற் பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கி றார் ஆளுநர் ரவி. புதிய கல்விக் கொள்கையை திணிக்க முயல்கிறார். பல்கலைக்கழகங்களில் மூக்கை நுழைக்கிறார். ஆன்லைன் ரம்மி நிறுவ னங்களுக்கு எதிரான அவசர சட்டத்தை காலாவதி ஆக்கச் செய்து ‘ரம்மி ரவி’ என்ற இழிபுகழை சம்பாதித் துள்ளார். இவைதான் இந்த ஆளுநரின் சாதனைகள்.

இதே ஆளுநர், கோவை கார்வெடிப்பு சம்பவத் தில் அரசியல் செய்ய முயற்சித்து கண்டிக்கப்பட்டார்.  தமிழ்நாட்டு அரசியலில் மூக்கை நுழைத்து, பாஜக தலைவராகவே நடக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆர்.எஸ்.எஸ் விருப்பத்தை பேசி கண்டனங்களை பெறுகிறார். இந்திய விடுதலைக்கும், தமிழ்நாட்டின் உருவாக் கத்திற்கும் ஏராளமான உயிர்த் தியாகங்களை செய்துள்ளது தமிழ்நாட்டு மண். ஆனால், அதி லெல்லாம் எந்த பங்கும் இல்லாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ். விடுதலை போராளிகளை காட்டிக் கொடுத் ததுடன், மொழிவழி மாநிலம் என்ற ஏற்பாட்டையும், பல்வேறு கலாச்சாரங்களின் இருப்பையும் எதிர்த்து செயல்பட்ட இழிவான வரலாற்றிற்கு சொந்தக் காரர்களே சங் பரிவாரத்தினர். இந்திய விடுதலைக்குப் பிறகும், 1957 ஆம் ஆண்டு ஜன சங்கத்தின் தேர்தல் அறிக்கை, ‘கூட் டாட்சி முறையை ஒழித்து இந்தியாவை ஒரே நாடு  என்று பிரகடனப்படுத்துவோம்’ என்று அறிவித்தது வெள்ளிடைமலை.  அதையே  கொல்லைப்புறம் வழியாக திணிக்க இப்போது அப்பட்டமாக முயற் சிக்கிறார் ஆளுநர்.

சட்டமன்றம் மற்றும் அரசின் நிர்வாக மொழிகள் அனைத்தும் தாய்மொழியில் நடக்க வேண்டுமென வும், மொழிவழி மாநிலங்கள் அமைக்க வேண்டு மெனவும் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் இயக் கம் நடத்திய நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாக முதலில் ஆந்திர மாநிலமும்,  தமிழ் நாடு அமைவதற்காக சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான போராட்டங்களும்,  நூற்றுக்க ணக்கான உயிர்த் தியாகங்களை தொடர்ந்தே 1956 நவம்பர் 1-ல் இந்தியா, 14 மாநிலங்களாகவும் 6 ஒன்றியப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் 1961 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்ற மசோதாவை தோழர் பி.ராமமூர்த்தி கொண்டுவந்தார். அவர் சிறையில் இருந்த சூழலில், இந்த மசோதாவை முன்வைத்து வாதாடினார் மேற்கு வங்கத்தை சேர்ந்த கம்யூ னிஸ்ட் உறுப்பினர் பூபேஷ் குப்தா. அண்ணாவும் அதனை ஆதரித்தார். ஆனால் மசோதா நாடாளு மன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

இவ்வாறு எழுச்சியுற்ற தமிழ்நாட்டு மக்கள்  ஆட்சி மாற்றத்தை உண்டாக்கினர். அண்ணாவின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்தது. அதற்கு பிறகு, முத்தாய்ப்பாக நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” பெயர் சூட்டப்பட்டது. அந்த தீர்மானம் ஒன்றிய அர சின் ஒப்புதலை பெற்று அமலானது. இப்படிப்பட்ட வர லாற்றைத்தான் துச்சமென பேசியுள்ளார் ஆளுநர். அனைத்து மொழிகளுக்கும் சமமான முன்னு ரிமை, தாய்மொழிகளுக்கு ஊக்கம், தாய் மொழி யில் நிர்வாகம், அனைத்து மக்களுக்கும் அதிகா ரம் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாகும்.  ஆளுநர் பதவியில் அமர்ந்து கொண்டு தமிழ் நாட்டு மக்களுக்கு விரோதமாகவும், ஆர்.எஸ்.எஸ். தொண்டராகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல் படுவது வன்மையான கண்டனத்திற்குரியது. இந்தப் போக்கை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்  என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.