states

img

கேங்மேன் தொழிலாளர்களை கொத்தடிமை போல் நடத்துவதா?

சென்னை, ஜூன் 10- கேங்மேன் தொழிலாளர்களை கொத்தடிமை போல் நடத்தும் மின்வாரியத்திற்கு கண்டனம் தெரி வித்து  மின் ஊழியர்கள் ஆவேசப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேங்மேன் பணியாளர்களை இரவு  பகல் என்று பாராமல் கொத்தடிமைகள் போல் வேலை வாங்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.   சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு   வெள்ளியன்று (ஜூன் 10)  மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், பொரு ளாளர் வெங்கடேசன், துணைப்  பொதுச் செயலாளர்கள் கே.ரவிச்சந்தி ரன், டி.பழனிவேல், தமிழ்நாடு பவர் இன்ஜினியரிங் அசோசியேஷன் மாநில  பொதுச் செயலாளர் கே.அருள்செல் வன், மாநில செயலாளர்கள் ஜீவா,  மதுசூதனன், எஸ்.கண்ணன், அகஸ்டின், வடக்கு மண்டல செயலா ளர் ஆர்.ரவிக்குமார், தெற்கு மண்டல  செயலாளர் ஏ.முருகானந்தம் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எஸ்.ராஜேந்திரன்  பேட்டி இதுகுறித்து பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் கூறுகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த  ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் புதிதாக  கேங்மேன் என்ற பதவி உருவாக்கப் பட்டு மாநிலம் முழுவதும் 9,482 பேர்  பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களை பணிக்கு எடுக்கும் போதே  மின் ஊழியர் மத்திய அமைப்பு கள  உதவியாளர் என பணியமர்த்த வேண்டும் என்று தெரிவித்திருந்தோம். ஆனால் தமிழக அரசும், மின்சார வாரிய நிர்வாகம் தொழிற்சங்கங்களிடம் ஆலோசிக்காமல்  2 ஆண்டுகளுக்கு பயிற்சி என்ற அடிப்படையில் பணி யமர்த்தப்பட்டனர்.

தூக்கியடிக்கப்பட்ட தொழிலாளர்கள்

சென்னையில் வசிக்கக் கூடிய தொழிலாளி கோயம்புத்தூருக்கும், கடலூரில் வசிக்கக் கூடிய தொழி லாளி நீலகிரி என தொலைதூர  மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட னர். திருமணமான இந்த தொழி லாளர்கள் குறைந்த ஊதியத்தில் குடும் பத்தை விட்டு விட்டு தொலைதூர மாவட்டங்களில் எப்படி பணி செய்ய  முடியும் என அவர் கேள்வி எழுப்பி னார். மின்சார வாரியத்தில் கடந்த 22.2.2018இல் தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் ஆரம்ப கட்ட பதவிகளுக்கு ஊழியர்களை பணிக்கு எடுப்பது என்றால் காலமுறை ஊதியத்துடன் 3 மாதம் மட்டுமே பயிற்சி அளிக்கப்படவேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மின்சார வாரிய நிர்வாகம் காலமுறை ஊதியம் வழங்காமல் ரூ. 15 ஆயிரம் மட்டும் தொகுப்பூதியமாக வழங்குகிறது. மின்சார வாரிய பணியாளராக ஒருவர் பணியில் சேர்ந்தாலே நிரந்தர பணியாளர்களுக்கான அத்தனை சலுகைகளும் அவர்களுக்கும் வழங்கப் பட வேண்டும். ஆனால் பணியமர்த்தப் பட்டு 15 மாதங்கள் கடந்த பின்பும் மின்வாரியம்  கண்டு கொள்ளாமல் உள்ளது.  திமுக அரசு, ஓராண்டு நிறை வடைந்த பிறகும் கூட மின்சார வாரிய தொழிலாளர்களின் பிரச்சனைகளில் இன்னும் கவனம் செலுத்தவில்லை. கேங்மேன் பணியாளர்கள் சொந்த  மாவட்டங்களுக்கு செல்ல ஊர்  மாறுதல் உத்தரவை வழங்க வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு முத்தரப்பு ஒப்பந்தப்படி பயிற்சி காலத்தை 3 மாதமாக குறைத்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும், கேங்மேன் பணியாளர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப உள்முக தேர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.