சென்னை, ஏப். 10 - அணுகத்தக்க தேர்தலுக்கான வழிகாட்டும் குழுவின் 4-ஆவது கூட்டம் அதன் தலைவரும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுமான சத்யபிரத சாகு தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், 18 வயதிற்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பெயர் சேர்ப்பதில் உள்ள பிரச்சனைகள், மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு சிறப்புத் தேவைகளை மேற் கொள்ளும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி, வாக்குச் சாவடிகளில் குறைந்தபட்ச வசதிகளான சாய்தளம், சக்கர நாற்காலிகள், குடிநீர், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வாக்குச்சாவடி வசதிகள், மருத்துவப் பொருட்கள், தேவையான தளவாடங்கள், தேவையான வெளிச்சம் கிடைக்கும் வகையிலான மின்சார ஏற்பாடுகள், வாக்காளர் உதவி மையம், தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை, வாக்குச்சாவடி தன்னார்வலர்கள், வரிசையை மேலாண்மை செய்தல் உள்ளிட்டவை குறித்து
பெயர், சின்னம் பொருத்தும் பணி
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர் மட்டுமே பொருத்த முடியும். ஆனால் சென்னையில் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் வாக்குப்பதிவு இயந்திரம் கூடுதலாக தேவைப்படு கிறது. மத்திய சென்னையில் 31 வேட்பாளர்கள் என்பதால் 2 வாக்குப்பதிவு இயந்திரமும், வடசென்னையில் 35 வேட்பாளர் கள், தென் சென்னையில் 41 வேட்பாளர்கள் இருப்பதால் தலா 3 வாக்குப்பதிவு இயந்திரமும் தேவைப்படுகிறது. இந்த நிலையில், வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிட்ட பின், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தக்கூடிய வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அச்சடிக்கும் பணி நடைபெற்று வரு கிறது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்துள்ளன. இதை யடுத்து, வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்களை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணிகள் அந்தந்த வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.