புதுதில்லி, அக்.26- ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில் மட்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட (MGNREGS) பதிவேட்டிலிருந்து 84 லட்சத்து 80 ஆயிரம் தொழிலாளர்கள் நீக்கப் பட்டுள்ளதாக- கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் அமைப்பான ‘லிப் டெக்’ (Lib Tech) புதிய ஆய்வு தரவுகளை வெளியிட்டுள்ளது. இதே காலத்தில், 45 லட்சத்து 40 ஆயி ரம் புதிய தொழிலாளர்கள் திட்டத்தில் சேர்க் கப்பட்டு உள்ளனர் என்றாலும், நிகர நீக்கம் 39 லட்சத்து 30 ஆயிரமாக உள்ளது. திட்டத்திலிருந்து அதிக தொழிலா ளர்கள் நீக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ் நாடு (14.7%) முதலிடத்திலும், சத்தீஸ்கர் (14.6%) இரண்டாமிடத்திலும் உள்ளன. இந்த நீக்கங்கள் திட்டத்திலிருந்து தொழிலாளர்களை நீக்கும் தொடர் போக் கின் ஒரு பகுதியாகும் என்று குறிப்பிட்டுள்ள ‘லிப் டெக்’ 2023 அக்டோபரில் 14 கோடியே 30 லட்சமாக இருந்த செயல்படும் தொழி லாளர்களின் எண்ணிக்கை 2024 அக்டோ பரில் 13 கோடியே 20 லட்சமாக குறைந் துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகை யில் நடப்பு நிதியாண்டில் சராசரியாக வழங்கப்பட்ட வேலை (ஒரு நிதியாண்டில் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நபர் பணிபுரியும் மொத்த வேலை நாட்கள்) நாட்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது 153 கோடி வேலை நாட்கள் என்ற அளவிற்கு - 16.6 சத விகிதம் குறைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் ஒடிசாவில் மிக அதிக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, அதே நேரம் மகா ராஷ்டிரா மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ‘லிப் டெக்’ பட்டியலிட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிக்கையில், 2022-23 மற்றும் 2023-24 நிதியாண்டுகளில் 8 கோடி பேர், நூறுநாள் வேலைத் திட்டப் (MGN REGS) பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டதாக ‘லிப் டெக்’ சுட்டிக்காட்டியது. மேலும், ஆந்திர பிரதேசத்தில் லிப்டெக் இந்தியா நடத்திய ஆய்வின்படி, சுமார் 15 சதவிகித நீக்கங்கள் தவறானவை என தெரியவந் தது. இந்த நீக்கங்கள், ஆதார் அடிப்படை யிலான பணம் செலுத்தும் முறையோடு (ABPS) ஒப்பிட்டுச் சரிபார்க்கையில் இந்த அதிக நீக்கங்கள் ஒத்துப்போகின்றன. பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களில் 27.4 சத விகிதம் (6.7 கோடி தொழிலாளர்கள்) மற்றும் செயலில் உள்ள தொழிலாளர்களில் 4.2 சத விகிதம் (54 லட்சம் தொழிலாளர்கள்) பேர் ஆதார் அடிப்படையிலான பணம் செலுத் தும் முறையில் (ABPS) பயன்பெறுபவர் களாக இல்லை. இவ்வாறு நூறுநாள் வேலைத்திட்டத் திலிருந்து வெளியேற்றப்படும் தொழிலா ளர்கள், வேலை கிடைக்கும் என்ற நம்பிக் கையை இழந்து, மீண்டும் கிராமங்களிலி ருந்து நகரங்களுக்கு இடம்பெயர்வதும் அதிகரித்துள்ளதாக ஆய்வில் குறிப்பிட்டுள் ளனர்.