states

இந்தியா கூட்டணி வென்றால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும்

சென்னை,செப்.10- இந்தியா கூட்டணி வென்றால்தான்  இந்தி யாவை காப்பாற்ற முடியும். அதற்காக நாம் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராசேந்திரனின் இல்லத் திருமண விழா  ஞாயிறன்று நடைபெற்றது. இதில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார். அவர் பேசியதாவது: மணமக்கள் வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்குத் தொண்டர்களாக விளங்க வேண்டும். நம்முடைய வீடு மட்டும் அல்ல,  நாடும் நன்றாக இருக்க வேண்டும். அதற்காக வும் பங்களிக்க வேண்டும் என்று சொல்வேன். நம்முடைய நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், 2024 நாடாளு மன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும். ஆகவே, வரும் நாடாளு மன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் இருக்கிற 40 தொகுதிகளிலும் நாம் ஜெயித்தாக வேண்டும். அப்படி முழு வெற்றி யை பெற்றால்தான் அடுத்து அமையப் போகிற ஒன்றிய ஆட்சியிலும் நாம் முக்கி யப் பங்காற்ற முடியும். நாம் எல்லோரும் சேர்ந்து உழைக்க உறுதி எடுத்துக் கொள்ள  வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.