states

தாம்பரத்தில் நிற்கும் தேஜஸ்: ரயில் நிலையத்தில் தொடக்க விழா

செங்கல்பட்டு,பிப்.26- தாம்பரத்தில் தேஜஸ் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று எம்பியாக பதவியேற்கும் முன்பே ரயில்வே துறைக்கு கடிதம் கொடுத்ததாக திமுக எம்பி டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.  தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப் புற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் சென்னை - மதுரை இடையே இயக்கப் படும் இருமார்க்க தேஜஸ் விரைவு ரயில், தாம்பரத்தில் நிற்க வேண்டும் என  கோரிக்கை வைத்து வந்தனர்.  இந்நிலையில், சென்னையிலிருந்து மதுரைக்கு இருமார்க்கத்திலும் இயக்கக் கூடிய தேஜஸ் விரைவு ரயில், ஞாயிறன்று (பிப்.26) முதல் சோதனை அடிப்படையில் 6 மாத காலங்களுக்கு தாம்பரத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தர விட்டிருந்தார். இதன் தொடக்க விழா தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், திமுக எம்பி டி.ஆர்.பாலுவும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச் சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு , “தேஜஸ் ரயில்  தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு மே  30 ஆம் அன்று ரயில்வே ஆணைய தலை வரை நேரடியாக சந்தித்து அதற்கான கடிதத்தை திமுக சார்பில் கொடுத்தேன். அதன் தொடர் நடவடிக்கையாகத்தான் தற்போது தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நிற்பதற்கான தொடக்கவிழாவைப் பார்க்கிறேன்”என்றார்.   கடந்த 2.1.2020ல் ரயில்வே பொது மேலாளராக இருந்த ஜான் தாமஸை சந்தித்து அவரிடம் ஒரு கடிதம் கொடுக்க ப்பட்டது. மக்களவையில் தற்போதைய ரயில்வே அமைச்சரைச் சந்தித்து கடிதம் கொடுத்தோம். இறுதியாக 23.12.2022 மற்றும் 8.2.2023 ஆகிய தேதி களில் ரயில்வே அமைச்சரைச் சந்தித்து கடிதம் கொடுத்தோம். நாங்கள் தொட ர்ந்து வலியுறுத்தி வந்தநிலையில், எப்படியாவது இதனை நிறைவேற்றித் தருவதாக கூறியிருந்தனர். அதன்படி தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்கிறது என்றும் அவர் கூறினார்.  ரூ.600 கோடி இதைத்தொடர்ந்து ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ரூ.840 கோடி செலவில் சர்வதேச அள வில் மேம்படுத்தப்படும். அதேபோல, ரூ.600 கோடி செலவில் தாம்பரம் ரயில் நிலையம் மேம்படுத்தப்படவுள்ளது ”என்றார்.