அதிமுக (எடப்பாடி) கூட்டணியில் அ.இ.பா.பிளாக்கிற்கு ஒரு சீட் கூட வழங்கப்படவில்லை. இதெல்லாம் சகஜம் என்கிறார் அக்கட்சியின் தமிழ்நாடு பிரிவுத் தலைவர் பி.வி.கதிரவன். வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் தேனி, இராமநாதபுரம் தொகுதிகளைக் கேட்டிருந்தோம். அதை வேறொரு கட்சிக்குக் கொடுத்துவிட்டார்கள். கேட்டதற்கு, “நாங்கள் ஏற்கனவே முடிவெடுத்து விட்டோம்; நீங்கள் லேட்டாக வந்துள்ளீர்கள். சட்டமன்றத் தேர்தலின் போது நீங்கள் நினைப்பது போல் செய்து கொடுக்கிறோம் என்றனர்” என்றார். தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பி.வி.கதிரவன், “இதெல்லாம் சகஜம்” என்றார்.