சென்னை,ஜன,1- அயலகத் தமிழ் உறவுகளை ஒன்றி ணைக்கும் முகமாக தமிழ்நாடு அரசு “அயலகத் தமிழர் தினம்” எனும் சிறப்பு தினத்தை அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் பிர மாண்டமாக கொண்டாடி வருகிறது. அயலகத் தமிழர்களின் கலாச்சார உறவு களை மேம்படுத்துவதின் ஒரு நகர்வாக பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்ந்து அங்கு வாழும் அயலகத் தமி ழர்களின் குழந்தைகளுக்காக வேர்களைத் தேடி” என்றொரு பண்பாட்டு பயணத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இத்திட்டம் மூலம் அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழர்களின் இளைஞர்களை தமிழ்நாடு அரசு செலவில் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து அவர்கள் தமிழ் மற்றும் தமிழர்தம் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதனடிப்படையில் வேர்களைத் தேடி திட்டத்தின் முதல் பயணம் கடந்த மாதம் 27 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இருந்து பயணம் தொடங்கி யது.
இப்பண்பாட்டு பயணத்திற்காக ஆஸ்திரேலியா, கனடா, பிஜி இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 58 இளைஞர்கள் தேர்வாகி தமிழ்நாடு அரசு செலவில் சென்னை வந்தடைந்துள்ளனர். இவர்கள் சென்னையில் இருந்து மகாபலிபுரம், தஞ்சா வூர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியா குமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, செஞ்சிகோட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்க ளுக்கு பயணித்து தமிழர்களின் கட்டி டக்கலை, சிற்பக்கலை, இயல், இசை, நாட்டி யம்,சிற்பம், ஓவியம், சுதந்திர போராட்ட வர லாறு, பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்து கொள்வார்கள். இத்துடன் தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆய்வா ளர்களுடன் கலந்துரையாடல்களும் பயிற்சி வகுப்புகளும் இடம்பெறுகின்றன. இந்த இருவார பயணத்தின் மூலம் தமிழர்களின் கலாச்சாரம், வரலாறு, மொழி யியல் உட்பட பல்வேறு திறன்களை கற்று ணர்வார்கள் மூன்றாவது ஆண்டாக அய லகத் தமிழர்கள் தினம் வரும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிர மாண்டமாக நடைபெறுகிறது. இவ்விழா வில் இந்த இளைஞர்கள் பங்கேற்று தங்க ளின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். மேலும் தங்கள் நாடுகளுக்கு சென்று தமிழர்களின் கலாச்சார தூது வர்களாகவும் செயல்பட ஊக்கம்பெறு வார்கள் என்று மாநில அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.