2013-14-ஆம் ஆண்டு 15 பில்லி யன் டாலராக (ரூ.1.275 லட்சம் கோடி) இருந்த இந்தியாவின் ஆடை ஏற்றுமதி கடந்த 10 ஆண்டு களுக்குப் பிறகு, 2023-24-ஆம் ஆண்டு 14.5 பில்லியன் டாலராக (ரூ.1.233 கோடி) குறைந்தி ருக்கிறது. இந்தியாவின் ஆடை ஏற்றுமதி யாளர்கள் வியட்நாம், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆடை ஏற்றுமதியாளர்களி டம் தங்களது வர்த்தகத்தை இழந்துள்ளனர். அதாவது 10 ஆண்டுகளில் 50 கோடி டாலர் (ரூ.4ஆயிரத்து 250 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. தோல்வி அடைந்த டாம்பீகம் “ஆத்மநிர்பார் பாரத்” என்று பிரதமர் மோடி 2021ஆம் ஆண்டு டாம்பீகமாக முழங்கிய “தற்சார்பு இந்தியா” திட்டம் உண்மையான தற்சார்புக்கு பலனளிக்கவில்லை. இதற்காக ரூ.10ஆயிரத்து 683 கோடி மதிப்பில் உற்பத்தி யுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தை அறி வித்தது. இதன்மூலம் 7.5 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ.3 லட்சம் கோடி மொத்த உற்பத்தி, ரூ.19 ஆயிரம் கோடி முதலீடு கிடைக்கும் என்று ஒன்றிய அரசு சொன்னது. ஆனால் இது எதுவும் நடைபெறாமல், வெற்று முழக்கமாக போனது என்பதை அனுபவம் காட்டுகிறது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் தோல்வி அடைந்தது என்று ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். செயற்கை நூலிழை உற்பத்தி சார்ந்த புதிய தொழில்நுட்பம், தயாரிப்புகளுக்கு சலுகை காட்டுவதாக அறிவித்தும் புதிய முதலீடுகள் வரவில்லை. இதுகுறித்து உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு நிறுவனம் என்ற அமைப்பு, இந்தியாவில் சிக்கலான நடைமுறை கள், இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் உள்நாட்டு கந்துவட்டி ஆகியவை இந்திய ஆடை ஏற்றுமதிக்குத் தடையாக உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் இந்திய ஏற்றுமதி அதிகரிப்பதற்கு மாறாக, வெளிநாடு களில் இருந்து இங்கு வரும் ஆடை மற்றும் ஜவுளி இறக்குமதி அதிகரித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டின் ஒரு காலாண்டில் கிட்டத்தட்ட 9.2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.78ஆயிரம் கோடி) இறக்குமதி அதிகரித்துள்ளது.
அம்பானியே கேட்கவில்லை
இது போதாதென்று இந்தியாவின் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனமான ரிலை யன்ஸ் ரீடெய்ல் போன்ற நிறுவனங்கள், உலகின் மிகப்பெரிய பேஷன் சில்லறை விற்பனை நிறு வனமான, சீனாவின் ஷீன் நிறுவன பிராண்டு களை, இந்திய சந்தையில் விற்பனை செய்யத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மோடியின் ஆத்மநிர்பார் பாரத் என்ற தன்னி றைவுத் திட்டத்தை மோடியின் நெருங்கிய நண்பரான அம்பானியின் நிறுவனமே பின்பற்றவில்லை!
சிறிய, நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு கடும் நிபந்தனைகள்
பெருமுதலாளித்துவ ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டுவதற்கு, பன்னாட்டு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையில், இந்தியாவின் ஆடை உற்பத்தியாளர்கள், “தர மான செயற்கைத் துணியைப் பெறுவதற்கு நேரத்தையும், பணத்தையும் வீணடிக்க வேண்டி யுள்ளது” என்று வேதனைப்படுகின்றனர். ஆனால் வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகள் இத்தகைய சிக்கல்களைச் சந்திப்ப தில்லை. இந்தியாவின் சிறிய, நடுத்தர ஆடை ஏற்றுமதியாளர்கள், துணிகளை இறக்குமதி செய்வதற்கு, இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் கடும் கண்காணிப்பு உத்தரவு களை எதிர்கொள்ள வேண்டியி்ருக்கிறது. இத னால் துணிகள் மட்டுமல்ல, பொத்தான்கள், ஜிப்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதி லும் அரசின் நடைமுறை காரணமாக கடும் நெருக்கடியைச் சந்திக்கின்றனர். இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் இறக்குமதி கட்டுப்பாடு காரணமாக ஒருபுறம் பாதிக்கும் நிலையில், மறுபுறம் ஆதித்ய பிர்லா குழுமம், நிர்மல் பைபர்ஸ் நிறுவனம் போன்ற உள்நாட்டு பெருநிறுவனங்களின் பாலியஸ்டர் நீண்ட இழை செயற்கை நூல்கள், விஸ்கோஸ் நூலிழைகள் ஆகியவற்றிற்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கிறது. வெற்று வாய் ஜாலம் பயன் தராது எனவே உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் களுக்கு நூல், செயற்கை நூலிழை உள்ளிட்ட மூலப்பொருட்கள், பொத்தான், ஜிப் உள்ளிட்ட உதிரிபாகங்கள் நிலையான விலை யில் கிடைப்பதற்கும், தயாரித்த ஆடை களை சந்தைப்படுத்துவதற்கும் உரிய ஏற்றுமதி, இறக்குமதி கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு ஒன்றிய அரசு எளிமையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால் தற்சார்பு என்று வாயளவில் சொல்லிக் கொண்டு, செயல் அளவில், மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான முறையிலேயே மோடி அரசு செயல்படுகிறது.
திருப்பூர் நிலைமை என்ன?
இத்தகைய அடிப்படை கொள்கைகளில் மாற்றம் காண ஒன்றிய அரசு மறுக்கிறது. ஆனால் இதைப் பற்றி பேசுவதற்குத் துணி வில்லாத ஏற்றுமதியாளர் சங்கங்கள், அவ்வப் போதைக்கான சந்தை ஏற்ற, இறக்கத்தைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ஆடை ஏற்றுமதியில் ஓராண்டுக்கு மேலாக வீழ்ச்சியை சந்தித்து வந்த திருப்பூரில் 2024 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஒரு சிறு வளர்ச்சி பதிவாகியுள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது பிப்ரவரியில் 4.8 சதவீதம், மார்ச்சில் 1.7 சதவீதம் என அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி ஏற்றுமதியாளர் சங்கத்தினர் திருப்திப்படுகின்றனர். மேலும் இங்கிலாந்து டன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள ஏற்றுமதியாளர்கள், இதன்மூலம் ஏற்றுமதி 10 சதவிகிதம் கூடுதல் வளர்ச்சி பெறும் என்று நம்புகின்றனர். எனினும் திருப்பூரில் கடந்தாண்டு பல்வேறு நெருக்கடிகளால் 20 சதவிகித சிறு, குறு, நடுத்தர ஏற்றுமதியாளர்கள் தொழிலில் இருந்து வெளியேறிவிட்டனர். சிறிய நிறுவனங்கள் வெளியேறிக் கொண்டிருக்க, தொழிலாளர்கள் வேலை வாய்ப்பும், வருமானமும் சுருங்கிக் கொண்டிருக்க, சில பெரிய நிறுவனங்கள் 20 சதவிகித தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதாகக் கூறுகின்றனர். குறைந்த கூலிக்கு ஆட்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.