states

காரைக்கால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி, ஜூலை 4- குடிநீரில் கழிவுநீர் கலந்து இருப்பதால் காரைக்கால் பகுதியில் உள்ள மக்களுக்கு கடந்த இரண்டு தினங்களாக காலரா, வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்நிலையில் புதுச்சேரி சுகாதாரத்துறை யின் சார்பில் காரைக்கால் மாவட்டத்தில் சுகாதார அவசர நிலை பிரகடனம் படுத்தப் பட்டுள்ளது. இதனையொட்டி காரைக்கால் மாவட்ட நிர்வாகமும் பொது மக்களை காய்ச்சிய தண்ணீரை அருந்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. மேலும் மாவட் டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.  மேலும், மாவட்டத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் காரைக்காலில் உள்ள  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜூலை 4 ஆம் தேதி முதல்3 நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகௌவுடு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

;