சென்னை, ஜூன் 2- தமிழகம் முழுவதும் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர். கொரோனா தொற்று காரண மாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படவில்லை. நடப்பு ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் கடந்த மே மாதம் நடத்தப் பட்டன. இந்த தேர்வுகள் 13 ஆம் தேதி முடிந்தன. இதனால் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மே மாதம் 14 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல் மாணவர்களுக்கும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை 5 ஆம் தேதியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரு கிற 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பள்ளிக்கல்வி துறை நடத்தும் எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும்படி ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குநர் சுதன் உத்தர விட்டுள்ளார்.