அதிக மதிப்புள்ள ‘அனாமதேய’ நன்கொடைகள் தேர்தல் ஜனநாயகம் மற்றும் அரசியல் நிர்வாகத்தின் மதிப்புகளை சீர்குலைக்கின்றது. ஏனென் றால் நன்கொடையாளர்களுக்கும் பயனாளிகளுக்கும் இடையே ‘நன்றி உணர்வை’ பிரதிபலனாக செலுத்தும் ‘கலாச்சாரத்தை’ இது மிகவும் எளிதாக்குகின்றது. தேர்தல் பத்திரங்களை யார் வேண்டுமானாலும் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக பணமாக்கக்கூடிய தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததன் மூலம் ஜனநாயகம் மற்றும் அரசியல் நிதி அளிப்பதில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருவதற்கு பேருதவி புரிந்துள்ளது.
தன்னிச்சையான சட்டத்திருத்தம்
அரசியலமைப்புச் சட்டத்தை, குறிப்பாக வாக்காளர்களின் தகவல் அறியும் உரிமையை இந்த சட்டம் முழுமையாக மீறுகிறது என உச்ச நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. ஒரு நிறுவனத்தின் லாபத்தில் 7.5 சதவீதம் என்ற உச்சவரம்பை நீக்கி அரசியல் கட்சிகளுக்கு அதை நன்கொடையாக அளிக்கலாம்; அதை பெறுபவர்களின் விவரங்களை லாப நஷ்ட கணக்கில் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என கம்பெனிகள் சட்டத்தை (Companies Act)திருத்தியது தன்னிச்சை யானது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் அளித்த நன்கொடை விவரங்களை வெளியிடுவதையும் இது கட்டாயமாக்கியுள்ளது.
நல்ல தீர்ப்புகளின் வரிசையில்!
வாக்காளர்களின் உரிமைகளை மேம்படுத்து வதற்கும் தேர்தலின் தூய்மையை பாதுகாப்பதற்கும் நீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகளின் நீண்ட வரிசையில் இதுவும் ஒன்றாகும்.
தோல்வியடைந்த வாதங்கள்
நீதிமன்றத்தின் இத்தீர்ப்பின் நியாயம் எவ்வித விதிவிலக்குக்கும் உட்படாதது. தேர்தல் நிதிக்காக கருப்புப் பணத்தை பயன்படுத்துவது தடுக்கப்படும் , வங்கிகளின் மூலம் நன்கொடைகளை அனுமதிக்கலாம் என்று தேர்தல் பத்திரத் திட்டத்திற்காக வைக்கப்பட்ட முதன்மை நியாயம் படுதோல்வி அடைந்தது. ஏனெனில் வாக்காளர்களின் உரிமையைக் குறைப்பதற்கு எதிரான குறைந்தபட்ச கட்டுப்பாடுகள் கூட இதில் இல்லை. அடையாளம் காணப்படாத பெரு நிறுவன நன்கொடைகள் மற்றும் நன்கொடையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் கொள்கை முடிவுகளுக்கு இடையே ஒரு தர்க்கரீதியான தொடர்பை உருவாக்கியுள்ளது.
கருத்துச் சுதந்திரம், தகவல் பெறும் உரிமை
ஒரு வேட்பாளரின் பின்னணி குறித்த தகவல்களைப் பெற முடியாமல் வாக்காளர்களின் கருத்துச் சுதந்திரம் முழுமை அடையாது என அரசியல் சாசனப் பிரிவு 19.(1)(a) வரையறுக்கிறது.இதன் அடிப்படையில் பல ஆண்டுகளுக்கு முன்பு வகுத்த ஒரு கோட்பாட்டின் இயல்பான விளைவாகவும் இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது. ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாக நிதியளிக்கும் கார்ப்பரேட் நன்கொடையாளர்கள் மீதான திரை அகற்றப்பட வேண்டும் என்பதும் இந்த தீர்ப்பில் உட்பொதிந்துள்ளது.
நன்கொடையாளர்கள் -ஆட்சியாளர்கள் பிணைப்பு
பணபலம் மூலம் நிர்வாகத்தின் மீது நன்கொடை யாளர்கள் வைத்துள்ள பிடியை குறைக்க இந்த தீர்ப்பு உதவக்கூடும் என்றாலும் இந்த சட்டத்தின் அந்தஸ்தை நீக்குவதை ஏற்கனவே சட்டப்பூர்வமாக முடிவு செய்திருக்க முடியுமா அல்லது வழக்கமான அடிப்படை யில் பத்திரங்களை வழங்குவதை தடை செய்திருக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் நன்கொடை யாளர்களுக்கு சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட னவா? பிரச்சாரத்திற்கு தேவையான கூடுதல் ஆதாரங்களை பயன்படுத்துவதற்கு இந்த நிதி உதவியதா என்பதை நாம் ஒருபோதும் அறிய முடியாது.எனவே, இடைக்கால தடை வழங்குவதற்கும் இது ஏற்ற வழக்கு.
தி இந்து (ஆங்கிலம்) ,16.2.2024 -தலையங்கம்.
- தமிழில்: கடலூர் சுகுமாரன்