states

2 மணி நேரத்தில் மதுரையிலிருந்து சென்னை வந்த இதயம்

சென்னை,ஜன.24- மூளைச்சாவு அடைந்தவரின் இதயத்தை சென்னையில்  ஒருவருக்கு பொருத்த 2 மணி நேரத்தில் மதுரையிலிருந்து கொண்டுவரப்பட்டது. மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவரின் இதயத்தை சென்னையில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மரணம் அடைந்தவரிடம் இருந்து அறுவை சிகிச்சை மூலம் இதயம் எடுக்கப்பட்டது.  சென்னை காவல்துறையின்  உதவியுடன், விமான நிலையத்தில் இருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கிரீன் காரிடர் அமைக்கப்பட்டு  2 மணி நேரத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு இதயம் கொண்டு வரப்பட்டது. உடல் உறுப்புகள் கொண்டுசெல்லப்படும் வழியில் போக்கு வரத்தை ஒழுங்குப்படுத்தி ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு தடை இல்லாத நிலையை ஏற்படுத்திக்கொடுப்பதுதான் கிரீன் காரிடர் முறை.