states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ரத்தப் பரிசோதனை  நிலையத்தில் தீ விபத்து

இராஜபாளையம், ஏப்.27- விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யம் காமராஜ் நகர் பகுதியில் மதுரை யிலுள்ள மீனாட்சி கிளினிக்கல் லேப் கிளை உள்ளது.  இந்நிலையில் செவ்வாய் நள்ளிரவு உள்ளே இருந்து புகை வந்தது. இரவு காவலாளி பார்த்தபோது யுபிஎஸ் கருவி யிலிருந்து தீப்பற்றி எரிந்து கொண்டி ருந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்த வுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

வழக்கறிஞர் தற்கொலை

தேனி, ஏப்.27- ஆண்டிபட்டியில் வழக்கு எதுவும் கிடைக்காததால் வழக்கறிஞர் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டதாக காவல்  துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (43). இவர் வழக்கறி ஞராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த மூன்று மாதங்களாக சரிவர  வழக்கு கிடைக்காததால் மனவருத் தத்தில் இருந்ததாகவும் அதனால் குழந்தைகளை வளர்ப்பது சிரமம் என்று புலம்பி வந்ததாக தெரிகிறது.  இந்நிலையில் புதனன்று காலை அவ ரது மாடியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரது உறவினர்கள் அவரை மீட்டு ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால், ஜெயக்குமார் வரும் வழியிலேயே உயிரி ழந்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் விசாரித்து வரு கின்றனர்.'

பொறுப்பேற்பு 

சின்னாளப்பட்டி, ஏப்.27-  திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த சுப்பிரமணி என்பவர் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டார்.  இதைத் தொடர்ந்து அங்கு வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த ஏழு மலையான் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பொறுப் பேற்றுக் கொண்டார்.  அவருக்கு ஆணையாளர் தட்சிணா மூர்த்தி, திமுக ஒன்றிய செயலாளர் முரு கேசன், சேர்மன் மகேஷ்வரி, துணை சேர்மன் ஹேமலதா மற்றும் ஒன்றியக் கவுன்சிலர்கள் வரவேற்றனர்.

மே தினத்தில் மதுக்கடைகளை  மூட உத்தரவு

தேனி, மே.27- மே தினத்தை முன்னிட்டு மே 1 (ஞாயி றன்று) மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் உத்தரவிட் டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மே தினத்தன்று அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அன்று எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது. மீறினால் கடை கள், பார் உரிமைதாரர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி  மாணவர்களுக்கு பாராட்டு 

சிவகங்கை, ஏப்.27-  காரைக்குடி அழகப்பா பல்கலைக்  கழக சிறப்பு கல்வியியல் மற்றும் மறு வாழ்வு அறிவியல் துறையின் கீழ் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதாரப் பள்ளி மாணவ-மாணவிகள் புத்தகத் திருவிழாவில் பங்கு பெற்றனர்.  இதில், தனிநபர் பாடல்கள், குழு நட னம், இசை ஆகியவற்றில் தங்களை வெளிப்படுத்தி மாவட்ட ஆட்சியர் ப.மது சூதன் ரெட்டியிடம் பரிசுகள் பெற்றனர்.  இவர்களை பல்கலைக்கழக துணை வேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர்கள் முனைவர் சுவாமிநாதன், பேராசிரியர் கருப்புசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் குணசேகரன், துறைத் தலை வர் சுப்பிரமணி ஆகியோர் பாராட்டினர்.

விருதுநகர் கும்பல் பாலியல் வழக்கு: குற்றவாளிக்கு ஜாமீன் மறுப்பு

கரில் 22 வயது இளம்பெண் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2-ஆவது குற்றவாளியாக உள்ள ஜூனைத்அகமது உள்ளார். இவர், திரு வில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஏப்ரல் 12-இல் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அம்மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள்  வாகனம் விபத்தில் சிக்கியது

காயங்களுடன் உயிர் தப்பினர்

மதுரை, ஏப்.27- மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி செவ்வாயன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில், மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட அனைத்து வாகன உரி மையாளர்கள் மற்றும் சாலைப் போக்கு வரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.  இந்நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு திரு வில்லிபுத்தூரிலிருந்து மினி வேனில் வந்தி ருந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு ஊருக்குச் சென்று கொண்டி ருந்தனர். அப்போது, திருமங்கலத்தை அடுத்துள்ள டி.குன்னத்தூர் அருகே மினி வேன் மீது காய்கறி ஏற்றிவந்த லாரி மோதி யது.  இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் வேனில் வந்திருந்த அனைவரும் உயிர் தப்பி னர். காய்கறி லாரி ஓட்டுநர் அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். வேனில் வந்தவர்கள் திரு மங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து டி. கல்லுப்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தவறாக வரவாகிய  ரூ.4 லட்சம்: வங்கியில் ஒப்படைத்த தனியார் ஊழியர்

தேனி, ஏப்.27- தேனி மாவட்டம் போடி சண்முகசுந்தர புரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (32).  இவர் தனியார் மெடிக்கலில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் செவ்வாயன்று இவரது வங்கிக் கணக் கில் ரூ.4 லட்சம் வரவு வைக்கப்பட்டது. இதற்கான குறுந்தகவல் இவரது மொபைலுக்கு வந்துள்ளது.  இதைப் பார்த்ததும் குழப்பம் அடைந்த வெங்கடேசன் வங்கிக்குச் சென்று இது குறித்து தகவல் தெரி வித்தார். மேலும் இந்தப் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான கடி தத்தையும் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இப்பணம் சரியான கணக்கில் வரவு வைக்கப்பட்டது. போடி காவல் துணை கண்காணிப்பா ளர் சுரேஷ், போடி நகர காவல் ஆய்வா ளர் ராமலட்சுமி ஆகியோர் பாராட்டு சான்றிதழ் வழங்கி வெங்கடேசனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இலவச அழகுக்கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி, ஏப்.27- கனரா வங்கி பயிற்சி மையம் மூலம் பெண்களுக்கு இலவச அழகுக்கலை பயிற்சி பெறுவதற்கு பெண்கள் மே 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி பயிற்சி மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்கு நர் தனசேகர பெருமாள் விடுத்துள்ள செய்திக்குறிப்பு; தேனி தாலுகா அலுவலகம் எதிரில் இயங்கி வரும் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் மே 12-ம் தேதி முதல் அழகுக்கலை இல வசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  18-வயது நிரம்பிய வேலையில்லா கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்க லாம். பயிற்சியுடன் உணவு இலவசம். தினமும் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை 30 நாட்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள் புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் நேரில் முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விப ரங்களுக்கு 81909-22599, 95003-14193 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

சாத்தூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் பலி

சாத்தூர், ஏப்.27- சாத்தூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம் பெண் இண்டர் சிட்டி ரயிலில் சிக்கி உயிரிழந்தார்.  சாத்தூர் அருகே உள்ள வைப்பாறு பாலத்திற்கும் இருக்கன்குடி ரயில்வே கேட்டிற்கும் இடையே திருவனந்தபுரம்-திருச்சி இண்டர்சிட்டி ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, ரயிலில் அடி பட்டு சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். இதையறிந்த வண்டி ஓட்டுநர் சாத்தூர் ரயில் நிலைய அதிகாரியிடம் தெரிவித்தார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தூத்துக்  குடி இருப்புப்பாதை காவல் நிலை யத்தினர் விசாரணை மேற்கொண்டனர்.  இதுகுறித்து சாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் உடல் கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

மைசூர் எக்ஸ்பிரசில்  2 கிலோ கஞ்சா பறிமுதல்

விருதுநகர், ஏப்.27- விருதுநகரில் மைசூர்-தூத்துக்குடி விரைவு ரயிலில் இருக்கையின் அடியில் கிடந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சாவை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 27 வரை தொடர் சோதனை நடத்த டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, கஞ்சா கடத்தல், பதுக்கல், விற்பனை சங்கிலி தொடரை உடைக்க வேண்டும், இதற்காக காவல்துறை யினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரி வித்திருந்தார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில், விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்த மைசூர்-தூத்துக்குடி ரயிலை காவல்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, இருக்கையின் கீழ் பகுதி யில் பை ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்து சோதனை யிட்டனர். அதில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா  இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அதை பறிமுதல் செய்த விருதுநகர் ரயில்வே காவலர்கள், ரயிலில் கஞ்சா பையை வைத்துச் சென்றது யார் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போட்டிகளில் வென்ற அழகப்பா  பல்கலை., மாணவர்களுக்கு பாராட்டு 

சிவகங்கை, ஏப்.27-  சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழா கலை இலக்கியப் போட்டி களில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் முதன்மை பெற்று பரிசுகளை வென்றுள்ளனர்.  கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டி யில் முதல் மற்றும் மூன்றாம் இடங்களையும் ஹைக்கூ கவிதை போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும் பரத நாட்டிய போட்டிகளில் சிறப்பான முதலிடத்தையும் கர காட்டம் மற்றும் கோலாட்ட போட்டிகளில் இரண்டாம் இடத்தை யும் ஒயிலாட்ட போட்டியில் மூன்றாம் இடத்தையும் அழ கப்பா பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் பெற்றனர்.  மாணவர்களை பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர்கள் முனைவர் சுவாமிநாதன், பேராசிரியர் கருப்புசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் குணசேகரன், ஆகியோர் பாராட்டினர். 

அடிப்படை வசதி கோரி நாற்று நடும் போராட்டம் 

இராஜபாளையம், ஏப்.27- இராஜபாளையம் அருகே முத்துசாமிபுரம் காமராஜ் நகர்  பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் சாலை நடுவே செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை சரிசெய்யக்கோரி நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முத்து சாமிபுரம் ஊராட்சியை சேர்ந்த காமராஜ் நகர் பகுதியில் பல ஆண்டு காலமாக கழிவுநீர் வாய்க்கால், சாலை வசதி, குடிநீர் வசதி, மின் விளக்குகள் போன்றவை எதுவும் செய்யப்படா மல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இந்நிலை யில், உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி  கழிவுநீர் வாய்க்கால் பகுதியில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தை நடத்தினர். 

வாலிபர் கொலை வழக்கில்  தாய், தந்தை உட்பட 3 பேருக்கு ஆயுள்

தேனி, ஏப்.27- தேனி அருகே வாலிபர் கொலை வழக்கில் தந்தை, தாய்  மற்றும் மகன் என மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த வர் செல்லப்பாண்டி (20). இவரை கடந்த 2016-ஆம் ஆண்டு  முன் விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் அவரது மனைவி ராமுத்தாய் மகன் அஜித்குமார் ஆகிய மூவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.  இது தொடர்பாக கூடலூர் காவல் நிலையத்தில் வழக்கு  பதிவு செய்யப்பட்டு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. புதனன்று விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தாய், தந்தை, மகன் மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால், ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதி மன்ற நீதிபதி சாந்தி செழியன் தீர்ப்பளித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தேனி வருகை புதுப்பொலிவு பெறும் வைகை அணை விருந்தினர் மாளிகை

தேனி, ஏப்.27- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 30 ஆம் தேதி தேனி மாவட்டத்திற்கு வருவதை முன்னிட்டு வைகை அணையில் உள்ள விருந்தினர் மாளிகை புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 30-ஆம் தேதி முடி வுற்ற வளர்ச்சிப் பணிகளை திறந்து வைத்து, புதிய வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவி களை வழங்குவதற்காக தேனி மாவட்டத்திற்கு வருகிறார். தேனியில் அன்னஞ்சி விலக்கு பகுதியில் இதற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 29ம் தேதியே தேனிக்கு வரும் முதல்வர் வைகை அணையில் உள்ள விருந்தினர் மாளி கையில் தங்குகிறார். இதனையடுத்து வைகை அணை விருந்தி னர் மாளிகையை தயார் செய்யும் பணியில் பொதுப்பணித் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விருந்தினர் மாளிகைக்கு புதிய வண்ணம் பூசுதல், புது மின் விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.