“மக்களவைத் தேர்தலுக்குப் பின், பிரத மர் நரேந்திர மோடி நாட்டை விட்டு வெளியேறி விடுவார்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்எல்ஏ கூறியுள்ளார். “பிரதமர் நரேந்திர மோடி அடுத்த முறை தமிழ்நாடு வரும் போதும் தமிழர்களின் வரவேற்பு வேறு விதமாக இருக்கும். காங்கிரஸ் தான் திமுக, திமுகதான் காங்கிரஸ். மோடியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் ஒற்றைக் கருத்து கொண்ட கட்சிகளாக திமுகவும், காங்கிர சும் உள்ளன. வரும் தேர்தலுக்கு பின்னால் பிரதமர் மோடி இந்தியாவை விட்டு வெளியேறி ஆப்பிரிக்காவுக்கு சென்று விடுவார்.