states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுட னான துப்பாக்கிச் சண்டையில் 2 குண்டு கள் தாக்கி படுகாயத்து டன் சிகிச்சை பெற்று வந்த ஜும் (ZOOM) என்ற மோப்ப நாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
  2. பாகிஸ்தானின் நூரியா பாத் பகுதியில் பேருந்து தீப்பிடித்த சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 18 பேர் தீயில் கருகி உயிரி ழந்தனர். 28க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்து மருத்துவமனை யில் அனுமதி.
  3. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில்  எந்த நேரத்தில் வேண்டு மானாலும் 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்படலாம் என்பதால் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அணையின் நீர் இருப்பு  93.47 டி.எம்.சி. ஆகவும், அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளதாக வும் தமிழ்நாடு நீர் வளத்துறை அதிகாரிகள் சுற்றறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளனர்.
  4. இந்தி திணிப்பை கை யில் எடுப்பது நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக் கும். மோடி, அமித்ஷா மீண்டும், மீண்டும் இந்தி யை திணிக்க முயன் றால் மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டத்து க்கு வித்திடும் என தமி ழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முரு கன் எச்சரிக்கை விடுத் துள்ளார்.
  5. துர்கா பூஜையின் போது, அசுரனுக்குப் பதிலாக மகாத்மா காந்தியைப் போன்ற சிலை காட்சிப் படுத்தப்பட்டது. இதை செய்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது? இதுபோன்ற வெட்கக் கேடான செயலுக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள் என மேற்கு வங்க முதல்வர் பானர்ஜி பேசியுள்ளார்.
  6. மேற்கு வங்கத்தில் ஆசிரி யர் பணி நியமன முறை கேடு தொடர்பாக மாநில முதன்மைக் கல்வி வாரி யத்தின் முன்னாள் தலை வரும், திரிணாமுல் காங் கிரஸ் எம்எல்ஏவுமான மாணிக் பட்டாச்சார்யா வை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மா ணிக் பட்டாச்சார்யாவை அக்டோபர் 25-ஆம் தேதி வரை  அமலாக்கத்துறை காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
  7. 2019-ஆம் ஆண்டு பிரத மர் மோடியை அவதூறாக பேசிய சம்பவத்திற்காக குஜராத் ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா தற்போது  செய்யப்பட்டுள்ளார். டுவிட்டர் பதிவில் பிரத மர் மோடி மீது தரக்குறை வான கருத்துக்களைப் பயன்படுத்தியதாக தேசிய மகளிர் ஆணை யம் சம்மன் அனுப்பி  இருந்தது குறிப்பிடத் தக்கது.
  8. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் பிற நாடுகளோடு இணைந்து அன்றாட உற்பத்தியைக் குறைக்க சவூதி அரேபியா மேற்கொண்ட முடிவால், சில விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மிரட்டியுள்ளார். எத்தகைய நடவடிக்கை என்று குறிப்பிடாமல், சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், விரைவில் நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த முடிவை ரஷ்யாவுடன் இணைந்து எடுத்ததால் அமெரிக்கா பதற்றமடைந்துள்ளது.
  9. மியான்மரில் தற்போது ஆட்சியில் உள்ள ராணுவத்தால் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகளில் வந்த தீர்ப்புகளால் ஆங் சான் சூ கிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை 26 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 1991-ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற 77 வயது ஆங் சான் சூகி மீதான மேலும் இரண்டு வழக்குகளில் தீர்ப்பு வந்துள்ளது. முந்தைய தண்டனைகளையும் சேர்த்து, மொத்தம் 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
  10. நேபாளத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளிலும் அதிருப்தி நிலவுகிறது. பலரும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். நான்கு கட்சிகள் கொண்ட ஆளும் கூட்டணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவின்படி, போட்டி வேட்புமனுவை திரும்பப் பெறாதவர்கள் அவரவர் கட்சிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.