states

தீக்கதிர் விரைவு செய்திகள்

குஜராத் கள்ளச்சாராய பலி 40 ஆக உயர்ந்தது!

குஜராத் மாநிலம், போதாட் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் என்று கூறி விற்கப்பட்ட மெத்த னால் கலந்த தண்ணீரைக் குடித்தவர்களில் செவ்வாய்க்கிழமை வரை 33 பேர் பலியாகி  இருந்தனர். இந்நிலையில், புதனன்று மேலும் 7 பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை  40 ஆகியுள்ளது. பலியானவர்களில் 31 பேர் போதாட் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் ஏனைய 9 பேர் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள 3 கிராமங்களைச் சோ்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, பாவ்லா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவும், அகமதாபாத் குற்றத் தடுப்புப் பிரிவும் இணைந்து விசாரணையை நடத்தி வருகின்றன.

2 ஆண்டுகளில் 4,484 விசாரணைக் கைதிகள் மரணம்!

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் 4,484 விசாரணைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய அரசின் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமையன்று மக்களவையில் தெரிவித்துள்ளார். அதில், கடந்த ஓராண்டில் மட்டும் நாடு முழுவதும் காவல்துறையினரால் விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் 2,544 பேர் உயி ரிழந்துள்ளனர். அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 501 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும், 2020-2021 ஆம் ஆண்டில் 1,940 விசாரணைக் கைதிகள் உயிரிழந்த நிலையில் 2021- 2022 இல் உயிரிழப்பு எண்ணிக்கை 2,544 ஆக உயர்ந்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு  முதல்வர் விருந்து

சென்னை,ஜூலை 27- 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்ல புரத்தில் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகளை சார்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இப்போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த 3 நாட்களாக வீரர்கள் சென் னைக்கு வந்த வண்ணம் இருந்தனர். ஜூலை 27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு முன்னதாக வீரர்கள் அனைவரும் சென்னைக்கு வந்துவிடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.  இந்த நிலையில், மாமல்லபுரம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பூம்புகார் நிறுவனத்தின் சார்பில் கலை நயமிக்க ஸ்தூபியை திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு தனியார் நட்சத்திர விடுதியில் இரவு விருந்து அளித்து கலந்துரையாடினார்.

தமிழ்நாட்டிற்கு “லீடர்”விருது

சென்னை,ஜூலை 27- தில்லியில் ஒன்றிய அரசின் தொழில்  முன்னேற்றம் மற்றும் உள்நாட்டு வணிகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலத்தில் புத்தொழில் சூழமைவினை வலுப்படுத்தும் நோக்கில் புத்தொழில் நிறுவனங்க ளுக்கு ஆதரவான செயல்பாடுகளை முன்னெடுத்ததற்காக தமிழ்நாட்டிற்கு “லீடர்”விருது வழங்கப்பட்டது.  முந்தைய ஆண்டுகளில் புத்தொழில்  சூழமைவில் வளர்ந்து வரும் மாநிலம் என்ற நிலையிலிருந்து தற்போது “லீடர்”  நிலைக்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது. ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட விருதினைக் சென்னை  தலைமைச் செயலகத்தில் முதலமைச் சரிடம் காண்பித்து அமைச்சர் அன்பரசன் வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, குறு,  சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் கள் துறை செயலாளர் வி.அருண்ராய், தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் முன்னாள் இயக்குநரும், தற்போதைய நில நிர்வாக ஆணையரு மான எஸ். நாகராஜன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மருத்துவரை கண்டறியும்  செயலி: அறிமுகம்

சென்னை,ஜூலை 27- பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவர்களைக் கண்டறிய ‘Search for doctor App’ என்ற செய லியை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்  அறிமுகப்படுத்தி உள்ளது.  நாட்டி லேயே முதல்முறையாக தமிழகத்தில்  இதுபோன்ற செயலி வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு  செய்யப்பட்ட மருத்துவர்கள் 1.60 லட்சம்  பேர் உள்ளனர். இந்த செயலியில் தற்போது 80 ஆயிரம் மருத்துவர்கள் இணைந்துள்ளனர். இதுபற்றி தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் கே.செந்தில் கூறும் போது, “கொரோனா காலகட்டத்தில் நிறைய போலி மருத்துவர்கள் உருவாகி னர். இந்த செயலி மூலம், கவுன்சிலில் பதிவு செய்துள்ள அனுபவம் வாய்ந்த சரியான மருத்துவர்களிடம் மக்கள் சிகிச்சை பெறுவதை உறுதிசெய்ய முடியும். மருந்துகளை பரிந்துரைக்கும் செயலி,மருத்துவச் சான்றிதழ் பெறும்  செயலியும் அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. தகவல்களைப் பாதுகாக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள் ளன” என்றார்.