states

மாடுகளை கொண்டு சென்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனையா?

சென்னை, மார்ச் 24- குஜராத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநி லத்திற்கு அனுமதியின்றி மாடுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற ‘குற்றத்திற் காக’ கடந்த 27-08-2020 அன்று குஜராத்தின் நிஜார் காவல் நிலைய போலீசார் முகமது அமீன் என்ற இளைஞரை கைது செய்கிறார்கள். இந்த வழக்கு தொடர்பான விசாரணை குஜராத் மாநிலத்தின் தாபி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன் அடிப்படையில் 04-11-22 -அன்று குற்றம் சாட்டப்பட்ட   முகமது அமீன் என்ற 22 வயது இளைஞருக்கு  நீதிபதி சமீர் சந்திர வியாஸ் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.  அதாவது,கைது செய்யப்பட்ட தினத் தில் இருந்து ஜாமீன் இன்றி 30 மாதங்க ளாக சிறையில் இருந்த அமீனுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கூடவே 5 லட்சம் அபராதமும், அதைக் கட்டத் தவறி னால் 5 ஆண்டுகள் தண்டனை கூடுதலாக அனுபவிக்க வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் நிற்கவில்லை நீதிபதி.‘பசுவின் சாணம் புனிதமானது, கதிரியக்கத் தையே தடுக்கும் ஆற்றல் கொண்டது’ என் றெல்லாம் தனது தீர்ப்பில் கதை எழுதி னார். ஆனால், இந்தியாவின் கால்நடைத் துறை அமைச்சகம் பசுவின் சாணம் குறித்து எந்தவொரு ஆய்வும் நடத்தப்பட வில்லை தெரிவிக்கிறது. 

ஆனால் நீதிபதி சமீர் சந்திர வியாஸ், தன்னுடைய தனிப்பட்ட நம்பிக்கைகள் காரணமாக, எந்த வித குற்றப்பின்னணியும் இல்லாத, தாய் தந்தையை இழந்த சின்னஞ் சிறு இளைஞன் முகமத் அமீனுக்கு அதிக பட்ச தண்டனையான ஆயுள் தண்டனை விதித்தது இயற்கை நீதிக்கு எதிரான செயல் மட்டுமல்ல, அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று குறிப்பிட்டு, 2023 ஜனவரி 30அன்று இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு  தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் பி.ஆர்.அரவிந்தாக்சன் கடிதம் எழுதியிருந்தார். இந்தியாவில் இருக்கும் உயர்நீதி மன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நம்பிக்கையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கு வதை தடுத்து நிறுத்தவேண்டுமென கோரிக்கையும் விடுத்திருந்தார். தனியாக வழக்கறிஞர் வைத்து வாதாடக் கூட வசதியற்ற நிலையில், அரசின் இலவச சட்ட உதவியோடு வழக்கை எதிர் கொண்ட முகமது அமீனுக்கு, அறிவிய லுக்கு புறம்பான காரணங்களை எல்லாம் கூறி ஆயுள் தண்டனை விதித்தது மனித உரிமைக்கு எதிரானது என்பதால் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் புகார் அனுப்பியிருந்தார்.  இந்தப் புகாரின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம்,குஜராத் நீதித்துறைக்கு எதிராக 20-03-23 ஆம் தேதி யன்று (வழக்கு எண்; 351/6/38/2023) வழக்குப் பதிவு செய்துள்ளது. பசுவின் மீதான நம்பிக்கையின் அடிப் படையில் விதிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தேசிய மனித உரிமைகள் ஆணை யம் வழக்குப் பதிவு செய்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.