states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ராகுல் தண்டனையை நிறுத்திவைக்க   குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு!

அகமதாபாத், மே 2 - குற்றவியல் அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க, குஜராத் உயர்நீதி மன்றம் மறுத்து விட்டது. மே 8 துவங்கி ஜூன் 3 வரையிலான கோடை விடுமுறைக்குப் பின்னரே இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் குஜராத் உயர்நீதிமன்றம் கூறிவிட்டது. இது ராகுல் காந்திக்கு  பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால், அவர் உச்சநீதிமன்றத் திற்கு செல்ல வேண்டிய கட்டா யத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார்.

பொது வாழ்க்கையிலிருந்து நான் விலகவில்லை: சரத்பவார் 

1999-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ் கட்சியை துவங்கியவர் சரத் பவார். நாட்டின் மிகமூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர். மகாராஷ்டிராவில் பாஜகவுடனான நீண்டகால கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டு பரம எதிரிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்ததில் சரத் பவாரின் பங்கு மிக முக்கியமானது. 2024 மக்களவைத் தேர்தலிலும் பாஜக-வுக்கு எதிராக இவர் முக்கியப் பங்காற்றுவார் என்பது அரசியல் வல்லுநர்களின் கணிப்பாகும். இந்நிலையில், சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். “நான் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால் பொதுவாழ்க்கையில் இருந்து விலகவில்லை. தேர்தல்களில் போட்டியிட மாட்டேனே தவிர, மகாராஷ்டிரா மற்றும் தேச நலன் சார்ந்த விஷயங்களில் தீவிர கவனம் செலுத்துவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘பி.எப்.பி.யுடன் பஜ்ரங் தளத்தை ஒப்பிட்டது துரதிர்ஷ்டமாம்’ 

கர்நாடகத்தில் பஜ்ரங் தளத்தை தடை செய்வோம் என காங்கிரஸ் அறிவித்திருப்பது பற்றி  விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவரான சுரேந்திரா ஜெயின் பேட்டி அளித்துள்ளார். அதில், “பஜ்ரங் தள் அமைப்பை, தேச விரோத மற்றும் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் காங்கிரஸ் கட்சி ஒப்பிட்டிருப்பது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது. நாட்டு மக்கள் இதனை ஏற்கமாட்டார்கள். இந்த சவாலை பஜ்ரங் தள் ஏற்கிறது. அனைத்து ஜனநாயக வழிகளிலும் இதற்கு நாங்கள் பதிலளிப்போம்” என்று அவர் கூறியுள்ளார்.

மகா விகாஸ் அகாதி கூட்டணி வலுவாக உள்ளது: அஜித் பவார்

தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வரு மான அஜித் பவார் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். அப்போது, “ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் கைகோர்த்து 10 மாதங்கள் ஆகிறது. ஆனால் அவர்களது கூட்டணியின் நோக்கம் நிறைவேறவில்லை. மகா விகாஸ் அகாதி கூட்டணி வலுவாக உள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எவரும் எந்தக் கட்சியுடனும் தொடர்பில் இல்லை அல்லது வேறு எந்த கட்சியை சேர்ந்தவர்களும் எங்களுடன் தொடர்பில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

‘என்னைத் தோற்கடிக்க இது ஒன்றும் குஜராத் இல்லை’

ஜெகதீஷ் ஷெட்டரை தோற்கடிப்பது என்னுடைய பொறுப்பு என்று பாஜக மூத்த தலை வரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா கூறியிருந்தார். இதுகுறித்து கொப்பலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கும் ஜெகதீஷ் ஷெட்டர், “நான் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைவேன் என்று அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பேசி வருகின்ற னர்; நான் உப்பள்ளி மக்களின் இதயத்தில் இருக்கிறேன். அதனால் அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் நான் வெற்றி பெறுவது உறுதி. என்னை தோற்கடிக்க இது குஜராத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் அல்ல. கர்நாடகத்தில் நடக்கும் தேர்தல். இதனை பாஜக தலைவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

பாஜக அரசை அகற்றவே தேர்தலில் போட்டி: சித்தராமையா

“5 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு 81 வயதாகும். அதன் பிறகும் நான் அரசியலில் தீவிரமாக  இருப்பேன். ஆனால், தேர்தலில் போட்டியிட மாட்டேன். முன்பு 2013-18 வரை 5 ஆண்டு கள் முழுவதுமாக முதல்வராக இருந்தேன், பொறுப்பில் இருந்து தப்பி ஓட விரும்பவில்லை. அத னால்தான் கடந்த தேர்தலில் போட்டியிட்டேன். பாஜக அரசாங்கம் மிகவும் ஊழல் மற்றும் வகுப்பு வாதமாக இருந்ததால்தான் இப்போது போட்டியில் இருக்கிறேன். பாஜக அரசு மாநிலத்தில் வெறுப்பை பரப்புகிறது. இந்த அரசை அகற்றவே தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறேன்” என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளான ‘வந்தே பாரத்’ ரயில்

கேரள மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஏப்ரல் 25 அன்று துவங்கி வைத்தார். இந்நிலையில், கேரள மாநிலத்தின் மல்லப்புரம் மாவட்டத்தில் திருநவ்யா மற்றும் திருர் இடையே சென்று கொண்டிருந்த ‘வந்தே பாரத்’ ரயில் மீது  கல்வீச்சு நடந்துள்ளது. இதில், ரயிலின் ‘சி4’ பெட்டி தாக்குதலுக்கு உள்ளானது. ரயிலின் கண்ணாடி  ஜன்னல்களிலும் விரிசல் ஏற்பட்டது. ‘வந்தே பாரத் ரயில்’ திருரில் நின்று செல்லும் என்று கூறப்பட்டது. ஆனால், பின்னர் திருரில் ரயில் நிற்காது என்று திடீரென அறிவிக்கப்பட்டது. இந்தப் பின்னணி யிலேயே கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. நாடு முழுவதுமே ‘வந்தே பாரத்’ ரயில்கள் கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாவது குறிப்பிடத்தக்கது.

மகாத்மா காந்தியின் பேரன்  அருண் மணிலால் காந்தி காலமானார்

மும்பை, மே 2- மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணி லால் காந்தி காலமானார். அவருக்கு வயது 89. மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் வசித்துவந்த அருண் மணிலால்,  மகாத்மா காந்தி - கஸ்தூரிபாய் காந்தி யின் இரண்டாவது மகனான மணிலால் காந்தி - சுசீலா மஷ்ருவாலா தம்பதிக்கு 1934-ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று தென்  னாப்பிரிக்காவின் டர்பனில் பிறந்தவர் ஆவார். 2016 வரை அமெரிக்கா வின் நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டரில் வசித்து வந்த அருண், பின்னர் இந்தியா வுக்கு வந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் குடி யேறினார்.  தனது தாத்தா காந்தியின் அடிச்சுவடு களை பின்பற்றி சமூக செயற்பாட்டாள ராகவும், எழுத்தாளராகவும் விளங்கி வந்தார்.  கடந்த 2017-இல் கோபத்தின் பரிசு: மற்றும் என் தாத்தா மகாத்மா காந்தியிடமிருந்து பெற்ற பாடங்கள் (The Gift of Anger: And Other Lessons From My Grandfather Mahatma Gandhi) உள்ளிட்ட சில புத்த கங்களை வெளியிட்டார்.  இந்நிலையில், உடல்நலக்குறைவு கார ணமாக அருண் மணிலால் காந்தி செவ்வா யன்று காலை காலமானார்.  இவருக்கு துஷார் காந்தி, அர்ச்சனா என்ற  2 குழந்தைகள் உள்ளனர். அருண் மணி லால் காந்தி மறைவுக்கு பல்வேறு தலைவர் களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கவுதம் கம்பீருக்கு காங்கிரஸ் கண்டனம்

விராட் கோலியுடன் மோதல் தொடர்பாக கவுதம் கம்பீருக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் கண்டனம் தெரிவித்துளார். இத்தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது,“கம்பீரின் “போக்கிரித்தனம்” வெட்கக்கேடா னது. இந்த மாதிரியான ஆக்ரோஷமான அணுகுமுறையை எப்போதா வது ஒரு நாள் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நல்லது செய்வதில் காட்டப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.

கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு  6 மாதம் அவகாசம்: உயர்நீதிமன்றம் 

சென்னை, மே 2- கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்த 6 மாதம் கால அவகாசத்தை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டை சேர்ந்த சண்முகம்என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “கூட்டுறவு சங்கங்களில் தகுதி யில்லாத பலர் உறுப்பினர்களாக சேர்க்கப் பட்டுள்ளனர். தகுதியான உறுப்பினர்களை சேர்த்து, இறந்த மற்றும் தகுதியில்லாத உறுப்பினர்களை நீக்கி, இது தொடர்பாக தகுந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை கூட்டுறவு சங்கங்களுக்கான தேர் தலை நடத்த தடை விதிக்க வேண்டும்”என கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி  டி.ராஜா, நீதிபதிடி.பரத சக்ரவர்த்தி அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுகூடுதல் தலைமை வழக்கறிஞர்  ரவீந்திரன், வழக்கறிஞர் சினேகா ஆஜராகி, ‘‘கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் பட்டி யலைசரிபார்த்து, திருத்தி அனுப்பும்படி அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் ஏற்கெனவே கடிதம் அனுப் பப்பட்டுள்ளது. குறைபாடுகளை நீக்கி, தேர்தலை நியாய மாக நடத்த திருத்தப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை வெளியிடுவது அவசியம். இதற்கு 6 மாத அவகாசம் தேவை’’ என்றனர். அதையடுத்து நீதிபதிகள், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் பட்டியலை திருத்தம் செய்து 6 மாத காலத்துக்குள் வெளியிட்டு, அதன்பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

ரூ.1000-க்கு மேல் மின் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்

சென்னை, மே 2- ரூ.1000-க்கு மேல் மின் கட்ட ணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என்று மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் கூறி யுள்ளது.  மின் கட்டணங்கள், அலுவலக கவுண்டர்கள் மற்றும் ஆன்லைனில் வசூல் செய்யப்பட்டு வருகின்றன. இதில் மின் கட்டணம் ரூ.5 ஆயிரத் துக்கும் மேல் இருந்தால் அதை மின் சார வாரிய அலுவலக கவுண்டர் களில் செலுத்த முடியாது. ஆன் லைன் அல்லது காசோலை, வரை வோலை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். இந்நிலையில் ரூ. 1000-க்கு மேல்  உள்ள மின் கட்டணத்தை ஆன்லை னில் செலுத்த நடவடிக்கை எடுக்கப் படுகிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்கு  முறை ஆணையம் சமீபத்தில்  சில மாற்றங்களை முன்மொழிந்துள் ளது. மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால் வீட்டு உபயோக நுகர்வோ ரின் மின் கட்டணம் ரூ.1000க்கு மேல்  இருந்தால் அதை ஆன்லைன் அல்லது காசோலை, வரை வோலை ஆகியவற்றில் மட்டும்தான்  செலுத்த முடியும். அதன்படி இரு மாத மின் பயன்பாடு 372 யூனிட்டு களை (ரூ.1003.50) தாண்டிய வீட்டு  உபயோக பயனர், மின்சார  வாரிய அலுவலக கவுண்டர்களில் பணம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

விவசாயிகள் விரோத பாஜகவை வீழ்த்துவோம்!

கர்நாடக மாநில விவசாய அமைப்புகள் சூளுரை

பெங்களூரு, மே 2- கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், “விவ சாயிகள் விரோத, மக்கள் விரோத வகுப்பு வாத பாஜக”வை வீழ்த்துவோம் என புத னன்று பெங்களூரில் விவசாய அமைப்புகளின் சிறப்பு மாநாடு நடை பெற்றது. இந்த சம்யுக்த கிசான் பஞ்சாயத்தில் 20 அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைவர்கள் பங்கேற்றனர்.  ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) தலைவர்கள் ஹன்னன் முல்லா, யோகேந்திர யாதவ், கவிதா குரு கந்தி, அவிக் சாஹா ஆகியோர் உரையாற்றி னர். கர்நாடக விவசாயிகள் சங்கத் தலை வர்கள் ஜி.சி.பாயாரெட்டி, படகலபுரா நாகேந்திரா, ஹெச்.ஆர். பசவராஜப்பா, வேளாண் விஞ்ஞானி பிரகாஷ் கம்மராடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இப்பஞ்சாயத்தில் பங்கேற்ற அழைக்கப் பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக தலைவர்களி டம் விவசாயிகளின் கோரிக்கை சாசனம் வழங்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கை களை தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். இம்மாநாட்டில், விவசாய அமைப்பு களின் முக்கியப் பங்களிப்புடன் கர்நாடக சட்ட மன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்; “விவசாயிகள் விரோத, மக்கள் விரோத, வகுப்புவாத பாஜக-வை வீழ்த்துவோம்”; வீட்டுக்கு வீடு பிரச்சாரம் செய்து, இதனை அடித்தட்டு மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.