states

வழிகாட்டு மதிப்பு மூன்று மடங்கு உயர்வு!

சென்னை, அக். 24- வணிக மனைகளுக்கான பத்திரப்பதிவில் அரசு வழிகாட்டு மதிப்பை மூன்று மடங்காக உயர்த்துவதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தலைவர்  ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: தமிழ்நாட்டில் குடியிருப்பு மனைகளின் அரசு மதிப்பீடு அண்மையில் அனைத்து பகுதி களிலும், உயர்த்தி அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த அதிர்ச்சியி லிருந்து மீள்வதற்குள் வணிக பயன்பாட்டிற்கான மனைகளின் அரசு வழிகாட்டு மதிப்பீடு, சாதா ரண குடியிருப்பு மனை மதிப்பீட்டில் இருந்து 3 மடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிட இருப்பதாக பத்திரிகைச் செய்தி கள் மூலம் தெரிய வருகிறது. வணிகர்களும், வணிகமும் ஏற்கெனவே பல்வேறு நெருக்கடி களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைன் வர்த்தகம், தற்காலிக விழாக்கால கடைகள், மூலப்பொருள் விலை உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்வு, மின் கட்டணம், சொத்து வரி உயர்வு, பணப்புழக்கம் குறைவு என பல்வேறு காரணங்க ளால் தொழில், வணிகமும் நசிந்து வரும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.   இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான மனைகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பு 3 மடங்கு உயர்த்துவதாக இருப்பது மிகவும் வேதனைக்குரிய தாகும். இதனால் புதிதாக தொழில் தொடங்குவோர், புதிய வணிக நிறுவனர்கள் தொழிலுக்கு வருவதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, சொத்து பரிமாற்றத்தில், மிகப்பெரிய மந்த நிலையை ஏற்படுத்தும். இதனால், வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கும். அரசுக்கான வரி வருவாய் குறை வதற்கான வாய்ப்புகள் உருவா கும். எனவே, தமிழ்நாடு முதல மைச்சர் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, வணிக மனைகளுக்கான அரசு வழி காட்டு மதிப்பீட்டு உயர்வை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அனைத்து  தொழில் துறையினர், வணிகர்கள் சார்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.