states

சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம்: தமிழக அரசு அனுமதி

சென்னை, ஆக. 9 - இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்திருந்தார். அந்த வகையில் ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம்,  ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர்  2 காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களுடன்  இனி வரும் காலங்களில் கூடுதலாக  மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம் மற்றும் நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம் ஆகிய நாட்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும் மக்கள் இயக்கமாக மீண்டும் நவம்பர் 1ஆம் தேதி ‘உள்ளாட்சிகள் தினமாக’ கொண்டாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் திங்கட்கிழமை, ஆகஸ்ட் 15ஆம் தேதி,  நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் கிராம சபை கூட்டம்  நடத்த தமிழக அரசு அனுமதி அளித் துள்ளது. அதன்படி கிராம சபை  கூட்டத்தினை ஊராட்சி எல்லைக்குட் பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணியளவில் நடத்த  வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறைவெண் வரம்பின் படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ள இடம் நேரம் ஆகியவை கிராம மக்க ளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராம சபைக் கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

;