சென்னை, ஜன.7- சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தி னம் மைதானத்தில் பெருநகர சென்னை காவல்துறை சார்பில் பள்ளி மாணவர் களை நல்வழிப்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் சிற்பி திட்டத்தின் கீழ் 100 பள்ளிகளை சார்ந்த 5000 மாண வர்களுக்கு யோகா பயிற்சியை அமைச் சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகி யோர் துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “இந்தி யாவில் உள்ள மாநகரங்களில் பெண்கள் வாழ பாதுகாப்பானது சென்னை என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மாநகர காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரு கிறது. மாநகரம் முழுவதும் சிசிடிவி கண்கா ணிப்பு, மக்கள் கூடும் இடங்களில் ட்ரோன் கண்காணிப்பு என இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது சென்னை மாந கரம். சிற்பி திட்டத்தின் கீழ் மாணவர் களுக்கு யோகா பயிற்சியை காவல்துறை தொடங்கியுள்ளது. மனதளவிலும், உடல் நலனிலும், தனிநபர் ஒழுக்கத்தை கற்பிக்கவும் இந்த பயிற்சி உதவும். செவிலியர்கள் போராட்டத்தை பொறுத்தவரை செவிலியர்கள் சங்க நிர்வாகிகளை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். கொரோனா காலத்தில் பணி யாற்றிய செவிலியர்களை மாவட்டம் வாரி யாக பணியமர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு எந்த ஒரு பணி பாதிப்பும் ஏற்படாமல் அரசு பாதுகாக்கும். இதுவரை அவர்கள் 14 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம் பெற்ற நிலை யில் தற்போது 18 ஆயிரம் ரூபாய் வழங்கப் பட உள்ளது. செவிலியர்களை சிலர் தூண்டி விட்டு இந்த போராட்டம் நடை பெற்று வருகிறது. செவிலியர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும். செவிலி யர்கள் விவகாரத்தில் சுமூக சூழலை ஏற் படுத்த அரசு முயன்று வருகிறது.” என்றார்.