states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்தியாவில் வெள்ளி யன்று தங்கத்தின் விலை புதிய ‘வரலாறு’ படைத் துள்ளது. இதுவரை இல்லாத வகையில் 10  கிராம் தங்கம் ரூ. 56,245 ஆக உயர்ந்தது. இதற்கு முன் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்டில் 10 கிராம் தங்கம் ரூ.56,191-க்கு விற்கப்பட்டதே முந் தைய வரலாறாக இருந்தது.

மகாராஷ்டிரா மாநி லத்தின் முக்கிய நகரான புனேவின் பெயரை “ஜிஜாவ் நகர்” என மாற்ற வேண்டும் என  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்சி அமோல் மிட்காரி கோரி க்கை விடுத்துள்ளார். மன்னர் சத்ரபதி சிவாஜி யின் தாயார் ஜிஜாபாய் போசலேவின் பெயரை சுருக்கியே “ஜிஜாவ்” குறிப்பிடப்பட்டுள்ளது.

 ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காக குறைக்க இலங்கை அரசு  திட்டமிட்டுள்ளது. தற்போது இலங்கைக்கு ராணுவத்தில் 3,46,000 பேர் உள்ளனர். 2030-ஆம் ஆண்டிற்குள் 1,00,000 வீரர்களாக குறைக்க உள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சர் பிரேமித பண் டார தகவல் தெரி வித்துள்ளார்.

மாநில அரசு நடத்தும்  பள்ளிகளின் வகுப் பறைகளில் சிசிடிவி கேம ராக்களை பொருத்தும் தில்லி அரசின் முடி வுக்கு தடை விதிக்க தில்லிஉயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மாண வர்களின் தனியுரிமை யை மீறும் வகையில் சிசிடிவி கேமரா திட்டம் இருப்பதாக தில்லி பெற் றோர் சங்கம் தாக்கல் செய்த மனுவில் வாதம்.

பொங்கல் பண்டிகையை யொட்டி, சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊருக்கு செல்வதால் மதுரவாயல், போருர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வியாழனன்று பெருங் களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மும்பையில் உள்ள  சாரதாஷ்ரம் வித்யா மந்திர் இன்டர்நேஷனல் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படிக்கும் 8 வயதுச் சிறுமி பள்ளிக்கட்டணம் செலுத்தாத காரணத் திற்காக தனி வகுப்பறை யில் இரண்டு மணிநேரம் அமரவைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியது மட்டுமல்லாமல், கூடு தல் தண்டனையாக சிறு மியை தேர்வு எழுத வும் அனுமதிக்கப்பட வில்லை. உள்ளூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலம் சின் னார் ஷீரடி நெடுஞ்சாலை யில்  பதரே ஷிவார் அருகே வெள்ளிக்கிழமை காலை ஏழு மணியளவில் லாரி மீது சொகுசுப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத் தில் 10 பேர் உயிரிழந்த னர்.   12 படுகாயமடைந்த னர்.  உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல் வர் கூறியுள்ளார்.

உலகச் செய்திகள்

தற்போது பரவிவரும் காய்ச்சல்களுக்குத் தேவையான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாக கனடா மருத்துவர்கள் எச்சரிக்கை  செய்துள்ளனர். கனடாவின் பெருநகரங்களில் ஒன்றான டொரோன் டோவிலும் இந்தப் பற்றாக்குறை கடுமையாக இருக்கிறது. பெரும் அளவில் தேவை அதிகரித்துள்ள நிலையில், பெரியவர்களுக்கு சளி மற்றும் காய்ச்சலுக்காக வழங்கப்படும் மருந்துகள் கிட்டத்தட்ட காலியாகிவிட்டதாக மருந்து விற்பனை மையங்களும் தெரிவிக்கின்றன. 

பாலஸ்தீனத்தில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் தங்கள் வன் முறை வெறித்தாக்குதல்களை இஸ்ரேலிய ராணுவம் தொடர்கிறது. மேற்குக் கரைப் பகுதியில் உள்ள ஜெனின் நகரத்தில் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதலால் படுகாயமடைந்த 18 வயது அப்துல் ஹாடி ஃபக்ரி நஸ்ஸால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள் ளார். 2023 ஆம் ஆண்டில் நடந்துள்ள தாக்குதல்களில் இதுவரையில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் கொலை செய்யப்பட்டிருக் கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு தாக்குதலுக்கு ஆளான 25 வயது முகமது இக்மாயிலும் இறந்துவிட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரச்சந்தா தலைமையிலான நேபாள அரசுக்கு நாடாளு மன்றத்தில் பெரும்பான்மை கிடைத்துள்ள நிலையில், நாடாளு மன்றத்தின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் மீது கட்சிகள் கவனம் செலுத்துகின்றன. நம்பிக்கைத் தீர்மானத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த நேபாள காங்கிரஸ் இந்த இரு பொறுப்புகளுக்குமான தேர்தல்களில் மட்டுமில்லாமல், விரைவில் வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறது.