சென்னை, நவ.27- காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவை உணர்வு இல்லாதது, மூச்சுவிடு வதில் சிரமம் ஆகிய அறிகுறி உள்ள வர்களுக்கு மட்டுமே இனிமேல் கொரோனா பரிசோதனை மேற்கொள் ளப்படும் என்று பொதுசுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. மேலும், விமான பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் ரேண்டம் சோதனை கைவிடப்படுவதோடு, மகப்பேறு, அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படு வோருக்கும், உள்நாட்டிற்குள்ளேயே பயணிப்போருக்கும் கொரோனா பரி சோதனை கட்டாயமில்லை என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.