சென்னை,அக்.12- மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அர சுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒரு வர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2020-21ஆம் கல்வி யாண்டில் 5 லட்சத்து 32 ஆயிரம் மடிக்கணினி கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப்படவில்லை என்பதால், உடனடியாக இலவச மடிக்கணினி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இது தொடர்பாக கடந்த செப்டம்பரில் அரசுக்கு அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை புதனன்று (அக்.12) விசா ரித்த பொறுப்பு தலைமை நீதிபதி தலைமை யிலான அமர்வு, திட்டம் அமலில் இருந்தால் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கலாமே என அரசுக்கு அறி வுறுத்தி மனுவுக்கு இரண்டு வாரங்க ளில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.