states

நான்கு புதிய தொழிற்பேட்டைகள் : அமைச்சர்

சென்னை,ஏப்.7- ஒன்றிய அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கொரோனா என மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டதன் மூலம் தற்போது அந்த துறை சிறந்து விளங்குவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “திமுக அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் ரூ.656 கோடி மதிப்பில் மானியத்துடன் கூடிய கடனு தவி வழங்கியிருக்கிறது. பொரு ளாதாரத்தில் சமூகநீதியை நிலைநாட்ட கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரத்து  901 புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கியிருக்கிறோம்”என்றார்.

அனைத்து மாவட்டங்களிலும் சமச்சீரான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த துறையின் முக்கிய நோக்கம் என்றும் தொழில் முனைவோர், தொழில் உரிமங்கள் பெறுவதில் உள்ள சிரமங்களை  போக்க, ஒற்றைச் சாளர முறையின் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் 9 ஆயிரத்து 603 உரிமங்கள் வழங்கி யிருக்கிறோம் என்றும் அவர் கூறினார். இதனை தொடர்ந்து, பல புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதில், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் முள்ளி கொளத்தூரில், 28 ஏக்கரில் 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.14 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை ஒன்று தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும் என்றும், கிண்டியில் ரூ.175 கோடியில் தொழில்முனை வோருக்கு பயன்படும் வகையில் அடுக்குமாடி தொழில் வளாகம் அமைக்கப்பட்டு, அதன்மூலம் 2200 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.  கிருஷ்ணகிரி மற்றும் மதுரை மாவட்டங்களில் அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டப்படும். புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருது நகர், நெல்லை ஆகிய மாவட்டங்க ளில் சிட்கோ மூலம் புதிய தொழிற் பேட்டைகள் அமைக்கப்படும். இதன் மூலம் 6200 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் உள்ளிட்ட 43 அறிவிப்பு களை வெளியிட்டார்.