திருப்பூர், டிச. 16 - அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் 12ஆவது மாநில மாநாடு திருப்பூரில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு வெள்ளியன்று வழக்கறிஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் என்.முத்து அமுத நாதன் செய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: போதிய நிதி ஒதுக்கப்படாமல் நீதித்துறை வலுவிழக்கும் சூழல் உள்ளது. நீதிபதிகள் நியமனம் உள்பட நீதித்துறை காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் வழக்குகள் தேங்கி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. கொலிஜியம் முறைக்கு மாற்றாக ஒரு ஏற்பாடு வேண்டும் என மத்திய அரசு சொல்கிறது. இதன்மூலம் நீதித்து றை அதிகாரத்தை அரசின் கட்டுப்பாட்டு க்கு கொண்டு போக முயல்கிறது. எங்களைப் பொறுத்தவரை சுதந்திர மான நீதித்துறை செயல்பாட்டுக்கு உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதி கள், அரசு மற்றும் நாடாளுமன்ற எதிர்க் கட்சி பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் உள்ளடங்கிய தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்க வேண்டும். நீதிபதிகள் நியமனம் உள்பட அனை த்து அம்சங்களும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். இந்தியாவில் அரசுக்கு எதிராக தீர்ப்பு சொல்வதற்கு நீதிபதிகள் அச்சப்படும் நிலையை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது. ஆபத்தான முன்மொழிவு இந்திய நீதித்துறையில் வெளி நாட்டு சட்ட நிறுவனங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பணியாற்றலாம் என அகில இந்திய பார் கவுன்சில் முன் மொழிந்திருப்பது மிகவும் ஆபத்தா னது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான இந்த முன்மொழிவை ஏற்கக் கூடாது. தமிழக பார் கவுன்சில் இதை எதிர்க்க வேண்டும்.
பிறப்பு இறப்பு சான்றிதழ்
பிறப்பு இறப்பு சான்றிதழ் பணியை மீண்டும் நீதித்துறைக்கு மாற்ற வேண்டும். வாடகை கட்டுப்பாடு சட்டமும் மிக நுட்பமானது; அதையும் மீண்டும் நீதித்துறைக்கு மாற்ற வேண்டும். 18ஆவது சட்டக் கமிஷன் பரிந்துரைத்த படி உச்சநீதிமன்ற கிளையை சென்னை, ஹைதராபாத்தில் அமைக்க வேண்டும்.
இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை தருக!
நீதிமன்றங்களுக்கு வரக்கூடிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். அதேபோல் இளம் வழக்கறிஞர்களுக்கு வழங்கும் உதவித் தொகையை ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும், நீதிமன்றங் களில் மருத்துவ வசதி அளிக்க முதலு தவி மையங்கள் அமைக்க வேண்டும். பெண் வழக்கறிஞர்களுக்கு ஏராள மான பிரச்சனைகள் உள்ளன. அவர் களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். வழக்கறிஞர் சேமநல நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. அதை விரைவில் அமல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து மாநில மாநாட்டில் விவா தித்து தீர்மானங்கள் நிறைவேற்றப் படும். இந்த மாநாட்டில் கேரள சட்டத்துறை அமைச்சர் பி.ராஜீவ், தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகு பதி, மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் மற்றும் அகில இந்திய, தென்பிராந்திய வழக்கறிஞர் சங்கத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்டத் தலைவர் கே.சுப்பராயன், மாவட்டச் செயலாளர் பி.மோகன், மாநிலச் செயலாளர் அ.மணவாளன், தேசியக்குழு உறுப்பி னர் எஸ்.பொன்ராம், வை.ஆனந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.