சென்னை, ஆக. 31- கேந்திரிய வித்யாலயா பள்ளி களில் காலியாக உள்ள 12,044 ஆசிரி யர் காலி பணியிடங்களை உடன டியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசை இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் கோ.அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய கல்வித் திட்டத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யா லயா பள்ளிகளில் 12,044 காலிப் பணி யிடங்கள் இருப்பதாக செய்தி வந்துள்ளது பெரும் அதிர்ச்சி யளிக்கிறது. தமிழகத்தில் மட்டும் 1,162 ஆசிரியர் காலி பணியிடங்கள் இருப்பது என்பது ஒன்றிய அரசின் திட்டமிட்ட செயலாகவே கருத வேண்டியுள்ளது. மேலும் 40 விழுக் காடான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல்வர்களே இல்லை என்பது ஒன்றிய அரசின் கல்வி விரோத போக்கின் எடுத்துக் காட்டாக உள்ளது. மேலும் மத்திய கல்வி நிறுவனங்களில் பணி யிடங்களை நிரப்புவதில் இட ஒதுக்கீடு பின்பற்றுவதில்லை என்ற குற்றச் சாட்டை ஏற்கனவே இந்திய மாணவர் சங்கம் முன்வைத்துள்ளது. எனவே ஒன்றிய பாஜக அரசின் இத்தகைய கல்வி விரோத போக்கினை வன்மை யாக கண்டிப்பதோடு, உடனடியாக ஆசிரியர் காலி பணியிடங்களை இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என கேட்டுக் கொள்கி றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.