வடமாநில மற்றும் தமிழ் தொழிலாளர்கள் என்று அடையாளப்படுத்துடன் பண்டிகை விடுப்பு சம்பள உயர்வு கேட்பது குற்றம் என கூறும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை கண்டித்து செங்கல்பட்டு ராட்டினம் கிணறு பகுதியில் சிஐடியு சார்பில் மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி தலைமையில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாவட்ட செயலாளர் பகத்சிங் தாஸ் உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகளை செங்கல்பட்டு நகர காவல் துறை கைது செய்தனர்.