states

img

குறுவை பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்கிடுக!

தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை  சென்னை, நவ.4- காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள குறுவை, சம்பா, பயிர் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம்  நவம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் மாநிலத்தலைவர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத்தலைவர் ஹன்னன்முல்லா, மாநிலப் பொதுச்செயலாளர் சாமிநடராஜன், அகில இந்திய இணைச்செயலாளர் டி.ரவீந்திரன், மாநிலப்பொருளாளர் கே.பி.பெருமாள் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

“காவிரி டெல்டா மாவட்டங் களின் குறுவை சாகுபடிக்காக ஜூன்  12 அன்று மேட்டூர் அணை திறக் கப்பட்டும், கர்நாடக அரசாங்கம் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் காவிரியில் உரிய நீரை தமிழ்நாட்டிற்கு வழங்கா ததாலும், பருவமழை குறைபாட்டி னாலும் சாகுபடி செய்த குறுவை பயிர்கள் 2 லட்சம் ஏக்கர் பாதிக் கப்பட்டது. இந்த குறுவைப் பயிர்  களுக்கு உரிய நிவாரணம் விவசாயி களுக்கு கிடைக்கும் என எதிர் பார்த்த நிலையில் மாநில அரசு 40 ஆயிரம் ஏக்கர் தான் பாதிக் கப்பட்டுள்ளாக அறிவித்து, ஏக்க ருக்கு ரூ.5400 வழங்கப்படும் என அறிவித்தது. குறுவைப் பயிர்களுக்கு பயிர் காப்பீடு இல்லாத நிலையில் அர சின் நிவாரண அறிவிப்பு போது மானதாக இல்லை.எனவே, பாதிப்பு குறித்து முழுமையாக மறுக்கணக்கெடுப்பு செய்து ஏக்க ருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் கிடைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் கிடைக்காத நிலையில்  மேட்டூர் அணை மூடப்பட்டுவிட்டது. அவ்  வப்போது பெய்யும் மழை மற்றும் ஆழ்குழாய் கிணற்று பாசனம் மூலம் சம்பா சாகுபடி பணிகளை  விவசாயிகள் டெல்டா மாவட்டங்க ளில் மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பு ஏற்படும் பட்சத்தில்  காப்பீடு மூலம் உரிய இழப்பீடு  கிடைக்க அனைத்து விவசாயி களுக்கும் போர்க்கால அடிப்படை யில் அடங்கல் வழங்கிடவும் பயிர்க்  காப்பீட்டுக்கான இறுதி நாளை நவம்பர் 15 வரை என்பதற்கு பதி லாக நவம்பர் 30  வரை கால நீடிப்பு  செய்திடவும் தமிழக அரசு உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  100 நாள் தொழிலாளர்களுக்கு  கூலி பாக்கியை வழங்கிடுக 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த கிராமப்புற தொழிலா ளர்களுக்கு கடந்த நான்கு மாதங்க ளாக கூலிபாக்கி நிலுவையில் உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார்  2700 கோடி ரூபாய் நிலுவை உள்  ளது. இது குறித்து மாநில முதல்வர் கடிதம் எழுதியும் ஒன்றிய பாஜக  அரசு அலட்சியம் செய்வது  வன்மையான கண்டனத்திற்குரி யது.  தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், உடனடியாக ஒன்றிய பாஜக அரசு பயனாளி களுக்கு தரவேண்டிய கூலி  நிலுவை தொகையை தமிழ்நாட் டிற்கு விடுவிக்க வேண்டும்.