செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு!
சென்னை, நவ. 22 - சட்டவிரோத பணப்பரி மாற்ற தடைச் சட்டம் தொடர்பான அமலாக்கத் துறை வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூன் 14 அன்று கைது செய்யப்பட்டார். 10-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்ட நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில்- உடல்நிலை பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போதே, காணொலி முறை யில் செந்தில் பாலாஜி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் காவலை 11-ஆவது முறையாக டிசம்பர் 4 வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
முல்லைப் பெரியாற்றில் நீர் மின் உற்பத்தி
தேனி, நவ. 22 - முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, தமிழ கப் பகுதிக்கு ஞாயிறன்று 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பெரியாறு நீர் மின் உற்ப த்தி நிலையத்தில் மின்னுற் பத்தி துவங்கியது. இதில், புதன்கிழமை 105 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணை யின் நீர்மட்டம் 133.75 அடியாக உள்ளது.
டிசம்பரில் குரூப் 2 தேர்வு முடிவுகள்
சென்னை, நவ. 22 - குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. நகராட்சி ஆணையர், துணைப்பதிவாளர், இள நிலை வேலைவாய்ப்பு அலு வலர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், காவல் துறையின் பல்வேறு பிரிவு களில் உள்ள சிறப்பு நிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலி யாக உள்ள 5,446 பணியி டங்களை நிரப்ப குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக் கான முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 அன்று நடைபெற்றது. இந்த தேர்வை 51 ஆயி ரத்திற்கும் அதிகமானவர் எழுதியிருந்தனர். இந்த நிலையில் முடிவுகள் டிசம்ப ரில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள் ளது.