states

மணிப்பூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றிய அரசு தனிக்கவனம் செலுத்துக!

சென்னை, நவ.20- சென்னையில் திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன் கிழமை (நவ.20) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  தொடர்ந்து சமூகநீதிக்கு எதிரான நட வடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத அரசியல் சட்டவிரோதச் செயல்பாடுகளுக்கு இந்த உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறது.  மீனவர்கள் கைது, படகு பறிமுதல், அபரிமிதமான அபராதத் தொகை, சிறைத் தண்டனை, மீனவர்கள் மீது தாக்குதல் ஆகியவை தொடர்ந்து நடந்து வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இந்த நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையிலும், மீன்பிடி உரிமை களை நிலைநாட்டிடும் வகையிலும் இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசிடம் இப்போதாவது ஒன்றிய  பாஜக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.  இலங்கைத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வையும் ஒன்றிய பாஜக அரசு, இலங்கையின் புதிய அரசிடம் வலி யுறுத்தி உறுதி செய்ய வேண்டும். இனியும் வேடிக்கை பார்க்காமல் - மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து, மனிதநேயம் உயிர்பெற ஒன்றிய பாஜக அரசு, குறிப்பாக, நரேந்திர மோடி தனிக்கவ னம் செலுத்திட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இன்று முதல் தேர்தல் பரப்புரைப் பணிகளைத் தொடங்குங்கள். துண்டுப் பிரசுரங்கள், திண்ணைப் பிரச்சாரங்கள் என மக்கள் இயக்கத்தைத் தொண்டர்கள் அனைவரும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.