விண்வெளியில் மின்சாரம்
இஸ்ரோ ஜனவரி 1 அன்று விண்ணில் செலுத்திய FCPS செல் விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
அமலாக்கத்துறையினர் மண்டை உடைப்பு
மேற்குவங்கத்தில் சோதனைக்காக சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் துணை ராணுவப் படை யினரை, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு தாக்குதல் நடத்தினர். இதில் அமலாக்கத்துறையினரின் மண்டை உடைந்து, ரத்தம் கொட்டியது.
எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக உத்தரவு
கொடநாடு கொலை மற்றும் கொள் ளை வழக்கு விசாரணைக் காக முன்னாள் முதல் வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி யை உயர்நீதிமன்றவளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஜனவரி 30, 31 தேதிகளில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து
திருவண்ணாமலை மாவட்டம் செய் யாறு அருகே உள்ள மேல்மா சிப்காட்டின் 3-வது திட்ட விரிவாக்க எதிர்ப்பு போராட்டத்தின் போது விவசாயி அருள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அருள் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.