states

விக்கிரவாண்டி தொகுதிக்கு ‘ஜூலை 10’ இடைத்தேர்தல்!

சென்னை, ஜூன் 10 - விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை வெளி யிட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம், வேட்புமனுத் தாக்கல் ஜூன் 14 முதல் ஜூன் 21 வரை நடைபெறும்; வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24 அன்று நடைபெறும்; மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 26 கடைசி நாள்; ஜூலை 10 அன்று வாக்குப் பதிவு நடைபெறும், அதைத் தொடர்ந்து ஜூலை 13 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வும், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செய லாளருமான புகழேந்தி கடந்த ஏப்ரல் 5 அன்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 6-ஆம் தேதி புகழேந்தி காலமானார். இதையடுத்து, சட்டப்பேரவைச் செயலகம் அளித்த தகவலின் பேரில், விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக உடனடியாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதனால், மக்களவைத் தேர்தலின் 7-ஆவது கட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அவ்வாறு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிந்து, அரசும் பதவியேற்று விட்ட நிலை யில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தற்போது விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகு திக்கு, ஜூலை 10 அன்று இடைத்தேர்தல் நடை பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ஜூன் 10 முதலே தேர்தல்  நடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது” என்றதுடன், “இடைத்தேர்தல் பாதுகாப்பிற்காக துணை ராணுவத்தினர் விரைவில் தமிழகம் வர உள்ளதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரம் இடைத்தேர்தலுக்குப் பயன்படுத்தப்படாது” என தெரிவித்தார்.