states

மருத்துவ அறிவியலுக்கு எதிராக தொடரும் அவதூறு

புதுதில்லி, ஆக. 7 - நவீன மருத்துவ அறிவியலுக்கு எதி ராக பேசிவரும் கார்ப்பரேட் சாமி யார் ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மருத்து வர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கார்ப்பரேட் சாமியாரான ராம்தேவ்,  சில மாதங்களுக்கு முன்பாக நவீன  மருத்துவம் (அலோபதி) முட்டாள்தன மானது என்று பேசி, பெரும் சர்ச்சை யைக் கிளப்பினார். இதற்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. பாபா ராம்தேவ் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் அறிக்கை வெளியிட்டது.  இந்நிலையில், கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் மீண்டும் அலோபதி மருத்துவத்தைச் சாடி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். “அமெரிக்க ஜனாதிபதி ஜோ  பைடன் ஏற்கெனவே இரு தடுப்பூசி கள் செலுத்தியபின்பும், அவருக்கு  கொரோனா வைரஸ் தொற்று ஏற்ப ட்டுள்ளதே?” என்று ஹரித்துவாரில் செய்தியாளர்கள் ராம்தேவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்போது, “யோகா, ஆயுர்வேதா வின் துணையின்றி, எந்தவிதமான தடுப்பூசியாலும், நோய் எதிர்ப்புச் சக்தியை கொரோனா தொற்றிற்கு எதிராக நிரந்தரமாக வழங்க முடியாது.  எவ்வளவு பெரிய ஆளாக நீங்கள்  இருந்தாலும், அதிபராக இருந்தால் கூட, மிகப்பெரிய மருத்துவராக இருந்தால்கூட இதுதான் நிலைமை. உலக சுகாதார அமைப்பில் இருக்கும் உயர்ந்த அதிகாரிகள் கூட கொரோனா தடுப்பூசி செலுத்திய பின்பும் கூட மீண்டும் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள். இந்த உலகம், மருத்துவ அறிவியலால், தடுப்பூசி என்ற பெயரில் தவறாக வழிநடத்தப்படுகிறது. இந்த உலகம் யோகா, ஆயுர்வேதாவுக்கு மீண்டும் திரும்பும். மக்கள் துளசியைப் வளர்ப்பார்கள், கற்றாழையை தோட்டத்தில் வளர்ப்பார்கள், தங்கள் உடல்நலத்தைப் பெறுவார்கள்” என்று கூறியுள்ளார். ராம்தேவின் பேச்சு குறித்து, ரெசிடெண்ட் டாக்டர்ஸ் பெடரேஷன் அமைப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. “அலோபதி மருத்துவம் குறித்து ஆதார மற்ற பேச்சுகளை பேசுவது மக்களை அதன் மீதான நம்பிக்கையை இழக்க  வைக்கும்” என்று அதில் தெரிவித்துள்ளது. ரெசிடெண்ட் டாக்டர்ஸ் அசோசியே ஷன் கூட்டமைப்பும், “மீண்டும், அவதூறான, பொறுப்பற்ற முறையில் அலோபதி மருத்துவம், தடுப்பூசி குறித்து ராம்தேவ் பேசியுள்ளார். இதை கனிவுடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். இதன்மீது கடினமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய ஆராய்ச்சி, கடின உழைப்பு, நவீன மருத்துவம் ஆகியவை மீது மரியாதைக் குறைவான போக்கு ஏற்றுக்கொள்ள முடியாது, பொறுக்க முடியாது” என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

;