states

தீக்கதிர் விரைவு செய்திகள்

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு முதல் நாளே மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் விநியோகம்!

சென்னை, ஜன.2- தமிழகத்தில் அரை யாண்டுத் தேர்வு விடு முறைக்குப் பிறகு, ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு வியாழ னன்று பள்ளிகள் திறக்கப் பட்டன. புத்தாண்டின் முதல்  பள்ளி நாளாக அமைந்திருந்  ததால், மாணவர்கள் மிகுந்த  உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து வகை  பள்ளிகளிலும் அரையாண்டு  மற்றும் 2-ஆம் பருவத் தேர்வு கள் கடந்த டிசம்பர் 9 முதல்  23-ஆம் தேதி வரை நடத்தப்  பட்டன. தொடர்ந்து, டிசம்பர் 24 முதல் 2025 ஜனவரி 1  வரை மாணவா்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது. இந்த விடுமுறை முடிந்து,  வியாழனன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்  களும் மிகுந்த உற்சாகத்து டன் பள்ளிக்கு வருகை தந்த னர்.  இந்நிலையில், மாண வர்களுக்குத் தேவையான 3-ஆம் பருவத்துக்கான பாடநூல்கள், சீருடைகள் உள்ளிட்ட நலத்திட்ட கல்விப்  பொருட்களும் பள்ளி திறந்த  முதல் நாளே மாணவர் களுக்கு வழங்கப்பட்டன.

ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள்

சென்னை, ஜன.2- பதவிக் காலம் முடிய வுள்ள 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நிய மிக்க தமிழக அரசு முடிவு  செய்துள்ளது. அதற்காக அவசர சட்டத்துக்கான கோப்பு கள் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரக உள்  ளாட்சி மற்றும் நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்பு களுக்கு கடந்த 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல் நடை பெற்றது. 9 மாவட்டங்கள் தவி ர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி களுக்கு கடந்த 2019 ஆம்  ஆண்டு டிசம்பரில் தேர்தல்  நடந்தது. இதன் பதவிக்  காலம் ஜனவரி 5 ஆம் தேதி யுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், பதவிக் காலம் முடியவுள்ள 28 மாவட்  டங்களில் உள்ள ஊராட்சி களுக்கு சிறப்பு அதிகாரி கள் நியமிக்கப்பட உள்ள னர். இதற்கான அவசர சட் டத்துக்கான கோப்புகளை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது.

கல்வி வளாகங்களில் வெளிநபர்கள் நுழைய கட்டுப்பாடு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை, ஜன.2- கல்வி வளாகங்களில் வெளிநபர்கள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்க  வேண்டும் என்று தேசிய மக ளிர் ஆணையத்தின் உறுப்பி னர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குறி த்து விசாரணை நடத்திய  தேசிய மகளிர் ஆணையத் தின் உறுப்பினர் பிரவீன் தீட்சித் சென்னை விமான  நிலையத்தில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:  மாணவி பாலியல் வன் கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் கடந்த கால செயல் பாடுகள் என்னென்ன, அவ ருடன் தொடர்பில் இருந்த வர்கள் யார் என்பது குறித்து  முழுமையாக விசாரிக்க வேண்டும். அப்போதுதான் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு இருக்கும் என்பது  தெரிய வரும். அந்த நபர்  பயன்படுத்திய செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின் சாதனங்கள் அனைத்தையும் பரிசோதனை செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அனு மதியின்றி வெளியாட்கள் நுழைவதைத் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். கண்காணிப்பு கேமிராக்களை பாதுகாப்பு ஊழியர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகளை துணை ஆணையர் அல்லது  உதவி ஆணையர் அந்தஸ்  தில் உள்ள காவல்துறை அதி காரிகள் விசாரிக்க வேண் டும். பெண்களிடையே ‘112  இந்தியா’ என்ற அவசர கால உதவி செயலி குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் புகாரை உறுதிப்படுத்த பெண்  மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பாதிக்கப்பட்ட நபரை பரிசோதனை செய்ய  வேண்டியது அவசியம்.  வழக்கு விசாரணையின் போது அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

ஆளுநரின் நோக்கம் நிறைவேறாது
முறைப்படி துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவார்

தஞ்சாவூர், ஜன.2–  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, ராராமுத்திரைக் கோட்டை யில், வியாழக்கிழமை புதிய நியாய  விலைக் கடையை திறந்து வைத்த  உயர்கல்வித்துறை அமைச்சர்  கோவி.செழியன் செய்தியாளர்களி டம் கூறியதாவது:   தமிழகத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில், ஆளு நரின் செயல்பாடு என்ன என்பதை இந்தியாவே உற்று நோக்குகிறது. ஒவ்வொரு மாநில ஆளுநருக்கும் உள்ள உரிமை என்ன, கடமை என்ன  என்பதை அரசியலமைப்பு சட்டம் பல்வேறு நெறிமுறைகளில் சொல்லி இருக்கிறது. அதை மீறும் வகையில் உள்ள தமிழ்நாடு ஆளுநரின் செயல்  பாட்டினால், துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது.  துணைவேந்தர் நியமனத்தில், மூன்று உறுப்பினர்கள் தேர்வுக் குழு  என்பதை, நான்காக அதிகரிப்பதன் மூலம் அதை செயல்பட விடாமல் தடுப்பது தான் ஆளுநரின் நோக்க மாக உள்ளது. அவரது நோக்கம் நிறை வேறாது. முறைப்படி எல்லா நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டு துணை வேந்தர் பதவி நியமனம் செய்யப் படும். மாணவர்களின் நலனில் எதிர்க்  கட்சிகள், அரசியல் செய்ய வேண் டாம். மாணவர்கள் நலன் கருதி சிந்  திக்கின்ற, செயல்படுகின்ற முதல்வ ராக நமது முதல்வர் உள்ளார். இவ் வாறு அவர் கூறினார்.

அரசு ஊழியர்க்கு பொங்கல் போனஸ்! முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஜன.2- தமிழக அரசு ஊழியர்க ளுக்கு மிகை ஊதியம் மற் றும் பொங்கல் போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் உத்தரவிட்டுள் ளார். இதன்படி 2023-2024ஆம்  ஆண்டிற்கான ‘சி’ மற்றும்  ‘டி’ பிரிவு பணியாளர் களுக்கு மற்றும் ஆசிரியர் களுக்கு ரூ. 3000 என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு மிகை  ஊதியமும், ‘சி’, ‘டி’ பிரி வைச் சேர்ந்த ஓய்வூதி யதாரர்கள், குடும்ப ஓய்வூதி யதாரர்களுக்கு ரூ.500 பொங்  கல் பரிசாகவும் வழங்கப்பட  உள்ளது. இதற்காக 163.81  கோடி ரூபாய் ஒதுக்கீடு  செய்து உத்தரவிடப்பட்டுள் ளது.

நடிகர்  எஸ்.வி.சேகருக்கு  ஒரு மாத சிறை

சென்னை,ஜன.2- நடிகர் எஸ்.வி.சேகருக்கு  ஒரு மாத சிறை தண்டனை யை உறுதி செய்து சென்னை  உயர்நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்க ளில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டது தொடர்பாக  நடி கர் எஸ்.வி.சேகருக்கு எதி ராக வழக்கு தொடரப்பட்டி ருந்தது.  இவ்வழக்கின் மீதான மேல்முறையீட்டில் உயர்நீதி மன்ற நீதிபதி வேல்முருகன் அளித்த தீர்ப்பில், சிறப்பு நீதிமன்றம் நடிகர் எஸ்.வி. சேகருக்கு வழங்கிய ஒரு  மாத கால சிறை தண்டனை யை ரத்து செய்ய முடியாது, மேல்முறையீட்டை தள்ளு படி செய்ததோடு சிறை தண்  டனையை உறுதி செய்தார்.

திருமாவளவனுக்கு எதிரான  வழக்கு ரத்து

சென்னை, ஜன.2- கடந்த 2020 ஆம் ஆண் டில், இந்து பெண்கள் குறித்  துப் பேசியதற்காக விடு தலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல். திரு மாவளவன் மீது 6 பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக் குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள் , இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி திருமாவளவன் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

25 போதை மறுவாழ்வு மையங்கள்  திறக்க திட்டம்

சென்னை, ஜன.2- அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு வரும்  போதை மறுவாழ்வு மையங்  கள் ஓரிரு மாதங்களில் பயன் பாட்டுக்கு வரவுள்ளன. சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 25 மருத்து வக் கல்லூரி மருத்துவமனை களிலும் 20 படுக்கைகள் கொண்ட போதை மறு வாழ்வு மையங்கள் அமைக் கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக சுகா தாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “அரசு மருத்  துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் அமையும் மையங்களில் போதை பழக்கத்துக்கு பாதிக்கப் பட்டவர்களுக்கு மட்டு மின்றி, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் உள வியல் சிகிச்சை அளிக்கப் படும். இந்த மையங்கள் ஓரிரு மாதங்களில் பயன் பாட்டுக்கு வரவுள்ளது” என்று தெரிவித்தனர்.