states

img

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்

சேலம், அக். 20- பாஜகவை எதிர்க்கும் மாநிலங்களுக்கு நிதியை குறைப்பதும், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு நிதியை வாரி வழங்குவதும் என ஒன்றிய பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதாக கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வருகை தந்தார். முன்னதாக, சேலம் சிபிஎம் மாவட்ட குழு  அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,   பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் எங்கு சென்றாலும் பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகிறது. பெரும்பாலும் மத மோதல்கள் உருவாகும் சூழ்நிலையை உரு வாக்கி வருகிறார்கள். தற்போது சென்னிமலை பகுதியில் நடந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. தனிப்பட்ட ஒரு கிறிஸ்தவர் விமர்சனம் செய்த போது, ஒட்டுமொத்த கிறிஸ்த வர்கள் மீதும் பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொண்டது சரியான நடவடிக்கை அல்ல. பாஜகவின் வெறுப்பு அரசியலைக் கண்டித்தும், சிறுபான்மை மக்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள், கார்ப்பரேட் கொள்கைகளை கண்டித்தும் பொதுமக்களிடையே பிரச்சாரம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு எடுத்துள்ளது. அதற்கு உயர் நீதிமன்றம் தற்போது அனுமதி அளித்துள்ளது. தமிழகம் அமைதியாக இருக்க வேண்டும், மத மோதல்கள், மதக் கருத்து க்களால் மக்களை பிளவுபடுத்தக் கூடாது. இதற்கு அனைத்து மக்களும் கைகோர்த்து இருக்க வேண்டும்.

பொய்ப்பிரச்சாரம்

ஒன்றிய அரசு, தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை தருகிறது என தமிழக பாஜக தலைவர்கள் பொய்ப் பிரச்சாரங்களை செய்து  வருகின்றனர். பாஜக அல்லாத தென் மாநிலங் களில் ஒன்றிய அரசின் நிதி வருவாய் முழு வதும் நிறுத்தப்பட்டுள்ளது. ரூ.5,900 லட்சம் கோடி  நேரடி வரியில் ஒரு ரூபாய்க்கு 23 பைசா மட்டுமே தருகிறது. ஆனால், பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூன்று லட்சம் கோடி ரூபாய்  கட்டியதற்கு ஒன்றிய அரசு ஒன்பது லட்சம் கோடி ரூபாய் திருப்பி கொடுத்துள்ளது.  ஒன்றிய அரசு, பாஜகவை எதிர்க்கும் மாநிலங்களுக்கு ஒரு மாதிரியாகவும், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு மாதிரியாகவும் நிதியை வழங்குகிறது.  எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இருந்து வெளியில் வந்த பிறகு எந்த நல்ல விஷ யத்தை பேசி இருக்கிறார். ஒன்றும் இல்லை. ஜெயலலிதா மறைவிற்கு பின்பு ஒன்றிய அரசுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு,  மக்களுக்கு எதி ரான அனைத்து திட்டங்களுக்கும் ஆதரவு தெரி வித்து உள்ளார். குறிப்பாக, குடியுரிமை சட்டம், காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவு அளித்தார்.

ஆளுநர் பதவிக்கு அழகல்ல

தமிழ்நாடு அரசு நீட் தேர்வு குறித்து சட்டமன்றத் தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி தொட ர்ந்து நீட்டை எதிர்த்து போராடி வருகிறது. ஒன்றிய அரசு அதற்கு இதுவரை செவிசாய்க்காத நிலை உள்ளது. தமிழக ஆளுநரும் நீட் தேர்வுக்கு ஆதர வாக இருப்பதால் தற்போது நீட் தேர்வு நடந்து வருகிறது. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில்ஈடுபடும். தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர ராஜன் தெலுங்கானாவில் ஆளுநராகவும், தமிழ கத்திற்கு வந்தால் பாஜக தலைவராகவும் பேசுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. ஆளுநர்கள் அனைவருக்கும் சமமானவர்கள், ஆனால், தமிழி சை சௌந்தர்ராஜன் தொடர்ந்து தமிழகத்திற்கு வரும்போது பாஜகவின் கருத்துக்களை பற்றி பேசு வது ஆளுநர் பொறுப்பிற்கு அழகல்ல என்றார். முன்னதாக இந்த பேட்டியின்போது, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் பி.செல்வசிங், மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பின ர்கள் ஆர். வெங்கடபதி, பி.ராமமூர்த்தி, பொன்.ரமணி ஆகியோர் உடனிருந்தனர்.