states

வைரத் தொழிலாளர் சங்கம் பாஜகவை எதிர்த்து வாக்களிக்க முடிவு

காந்திநகர், நவ.26- குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில், சுமார் 30 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட  வைரத் தொழிலாளர் சங்கம், பாஜகவுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று அறிவித்  துள்ளது. மேலும் பாஜகவுக்கு எதிராக கடி தம் மற்றும் வாட்ஸ்-ஆப் பிரச்சாரத்திலும் அந்தச் சங்கம் தீவிரமாக இறங்கியுள்ளது. 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தா லும், குஜராத் தேர்தலில் இப்போதும் பாஜக வை தோல்விபயம் பிடித்து ஆட்டிக் கொண்டி ருக்கிறது. வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை என்று கூறிக்கொண்டாலும், பல்வேறு தரப்பு  மக்களிடம் நிலவும் கடுமையான அதிருப்தி யால் உள்ளூர அதற்கு பயம் இருந்து கொண்டே இருக்கிறது.  அதன் காரணமாகவே, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா  உள்ளிட்டோர் மாதக் கணக்கில் குஜராத் மாநி லத்தையே சுற்றிவந்து கொண்டிருக்கின்ற னர். பிரச்சாரத்தை இரண்டாம் கட்டத் தலை வர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பி விட்டுச் செல்வதாக இல்லை. அதற்கேற்பவே தேர்தல் நாள் நெருங்க நெருங்க பாஜகவுக்கான எதிர்ப்பும், மக்களி டையே வலுவாக எதிரொலிக்கத் துவங்கி யுள்ளது. 

குஜராத்தின் மிகமுக்கிய சமூகப்பிரிவான மல்தாரி மக்கள், கடந்தவாரம் தங்களின் மகா பஞ்சாயத்தைக் கூட்டினர். அந்த பஞ்  சாயத்தின் முடிவில், “குஜராத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகாலத்தில், பாஜக ஆட்சி யில் மல்தாரி சமுதாயத்தினர் மகிழ்ச்சியாக இல்லை. எனவே, வரவுள்ள தேர்தலில் நாங்  கள் பாஜகவுக்கு வாக்களிக்கப் போவ தில்லை என்று அறிவித்தனர். அத்துடன் காங்கிரசுக்கு வாக்களிக்கப் போவதாகவும் அறிவித்தனர். குஜராத் மக்கள் தொகை யில் மல்தாரி சமுதாயத்தினர் 8.5 சதவிகிதம்  என்ற எண்ணிக்கையில் இருப்பவர்கள் ஆவர். தேர்தலின் முடிவை தீர்மானிக்கும் அளவிற்கு சுமார் 61 லட்சம் வாக்குகளை யும் கொண்டிருப்பவர்கள். இது பாஜக தலை வர்களை கிலியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, 30 லட்சம் தொழிலாளர் களைக் கொண்ட ‘டிடபிள்யூயூஜி’ (Diamond Workers Union Gujarat - DWUG) எனும் குஜ ராத் வைரத் தொழிலாளர் சங்கத்தினரும் பாஜகவுக்கு எதிராகத் திரும்பி உள்ளனர். வைரத் தொழிலாளர்களின் நலன்களை காக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.  தொழில்முறை வரியைக் குறைக்க வேண்டும் என நீண்டகாலமாக வைர தொழி லாளர்கள் சங்கத்தினர் குஜராத் பாஜக அர சுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால்,  அவர்களின் கோரிக்கையை கடந்த 12 ஆண்டு களுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் பாஜக அரசு கிடப்பில் போட்டுள்ளது.  எனவே, வருகின்றன தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என  வைரத் தொழிலாளர் சங்கத்தினர், தங்களின்  சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் மூலமாக வும், வாட்ஸ்-ஆப் மூலமாகவும் வலியுறுத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் சூரத், நவ்சாரி மாவட்  டம் மற்றும் சவுராஷ்டிரா பிராந்தியத்தில் உள்ள மாவட்டங்களில் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வைரம் சார்ந்த தொழி லில் ஈடுபட்டு வரும் நிலையில் இது பாஜக வுக்கு எதிராக அமையும் என்பதில் சந்தே கமே இல்லை. இதுதொடர்பாக, வைரத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ரமேஷ் ஜிலாரியா பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார். அதில்,  “வைரத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும்  பிரச்சனைகளைத் தீர்க்க பாஜக அரசாங்கத்தி டம் தொடர்ந்து கேட்டு வந்தோம். அவர்கள் செவி சாய்க்கவில்லை. இதனால் பாஜக வுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என  முதற்கட்டமாக தொழிற்சங்கம் சார்பில் குஜ ராத் முழுவதும் உள்ள உறுப்பினர்களில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு கடிதம் மூலமாக வும், 40 ஆயிரம் பேருக்கு வாட்ஸ்-ஆப்பிலும் மெசேஜ் அனுப்பி உள்ளோம்’’ என்று தெரி வித்துள்ளார்.  கதிர்காம் மற்றும் வராச்சா தொகுதிகளில் மட்டும் வைரம் சார்ந்த பணிகளை மேற்கொள்  ளும் வகையில் பெரிய, சிறிய மற்றும் நடுத்தர வகையை சேர்ந்த 4,500 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் மொத்தம் 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.