states

தீக்கதிர் விரைவு செய்திகள்

அவதூறு பேச்சு: ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது

சென்னை, செப்.14- சென்னை மாம்பலம் ராஜம்மாள் தெருவில் வசித்து வருபவர் ஆர்.பி.வி.எஸ். மணியன். 84 வயதான அவர்  மாம்பலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசி னார். அப்போது அம்பேத்கர் மற்றும்  திருவள்ளுவர் பற்றி அவதூறு தெரி விக்கும் வகையில் கருத்துக்களை கூறியுள்ளார். அவரது பேச்சு விவரம் வருமாறு:-அம்பேத்கர் தான் அரசியல் அமைப்பை கொடுத்தார்னு பல பேரு எழுதிகிட்டு இருக்காங்க.. பேசிகிட்டு இருக்காங்க.. இப்ப இருக்கிற ஆட்சி யாளர்களும் இதையே சொல்லிகிட்டு இருக்காங்க.. துதி பாடிகிட்டு இருக்காங்க. அரசியல் சட்டத்தை  உருவாக்கியது யார்னு சேர்மன் பேரை போட்டால் ராஜேந்திர பிரசாத்  பெயரைத்தான் போடனும். அங்கு கிளார்க்காக வேலை பார்த்த வர், டைப் அடிச்சவர், டைப்புக்கு புரூப்  பார்த்தவர் தான் அம்பேத்கர். அவர் தன்னுடைய மூளையில் இருந்து அரசியல் சாசனத்தை எழுதியதாக எங்கேயும் எழுதி வைக்கவில்லை. கிராமங்களில் அக்ரஹாரங்களில் பிராமணர்கள் இருக்கிறாங்க என்பான். இங்கிட்டு காலனி ஆட்கள்னு  சொல்லுவான். காலனி ஆட்கள். எந்த  காலனியில் ஒட்டிகிட்டு வந்தாங்கன்னு எனக்கும் தெரியாது. திருக்குறளை எழுதியது திரு வள்ளுவர் கிடையாது. அவரோட அப்பா-அம்மா பெயர் யாருக்காவது தெரியுமா?இவ்வாறு அவர் பேசியுள்ளார். இது தொடர்பாக மாம்பலம் காவல்  நிலையத்தில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து  ஆர்.பி.வி.எஸ். மணியனை கைது செய்தனர். 

சிபிஐ 3 நாள் மறியலில்  61 ஆயிரம் பேர் கைது

சென்னை, செப். 14 - நாட்டின் ஜனநாயக வாழ்வுக்கும், கூட்டாட்சி முறைகளுக்கும் ஏற்பட் டுள்ள பேராபத்தை தடுக்கவும், மக்களின் வாழ்க்கை தர மேம்பாட்டிற் கும் பாஜக அரசை ஆட்சியில் இருந்து  அகற்றுவது முன் தேவையாகி யுள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் கடமையில் பொது  மக்களின் கவனத்தையும் ஆதரவை யும் திரட்டும் வகையில் செப் 12 முதல் 14 வரை மூன்று நாள் இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு முழு வதும் 200க்கும் மேற்பட்ட மையங்க ளில் தொடர் மறியல் போராட்டத்தை நடத்தியது. இதில் 61 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். மூன்றாவது நாளாக 50க்கும் மேற்பட்ட மையங்களில் நடந்த மறி யலில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். இந்த போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்த அனை வருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்து கொள்கிறது என்று அக்கட்சியின் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன் தெரிவித் துள்ளார். 

வண்டலூரில் 
33 முட்டையிட்ட நெருப்புக்கோழிகள் 

சென்னை, செப்.14- சென்னை அருகே வண்டலூர் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகி றது. ஆனால் அதிகமான பார்வை யாளர்கள் வந்து செல்லும் முக்கிய மான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. பூங்காவில் மொத்தம் 17 நெருப்புக் கோழிகள் உள்ளன. இதில்  2 ஆண், 5 பெண் நெருப்புக்கோழி களாகும். மேலும் 10 நெருப்புக் கோழிகள் இன்னும் வளர வேண்டி உள்ளதால் அவற்றின் இனம் இன்னும் அறியப்படாமல் உள்ளது. இந்த நிலையில் தற்போது பூங்காவில் உள்ள நெருப்புக் கோழி கள் மொத்தம் 33 முட்டை போட்டுள் ளது. அதை நெருப்பு கோழிகள் குஞ்சு  பொரிப்பதற்காக அடைகாத்து வருகின்றன. பொதுவாக நெருப்புக் கோழிகள் முட்டையிலிருந்து குஞ்சு வெளியே வர சுமார் 42 நாட்கள் ஆகும். அதிக அளவில் முட்டைகள் இருந்தாலும் அதில் 6 அல்லது 8 முட்டைகளில் இருந்து மட்டுமே நெருப்புக்கோழி குஞ்சு பொரிக்கும் என்று கூறப்படுகிறது. மீதமுள்ளவை வீணாகிவிடும் என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நெருப்புகோழி யின் முட்டை மற்றும் நெருப்பு கோழிகள் செயல்பாடுகளை பூங்கா ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

காவல்துறையில் 127 பேருக்கு அண்ணா பதக்கம்­

சென்னை, செப்.14- முன்னாள் முதல்வர் அண்ணா வின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காவல்துறை மற்றும்  சீருடை பணியாளர்கள் உள்ளிட்ட  127 பேருக்கு அண்ணா பதக்கங் கள் வழங்கப்படும் என்று முதல் வர் மு.க.ஸ்டாலின் அறிவித் துள்ளார். இது தொடர்பாக அரசு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- இந்த ஆண்டு, காவல் துறை யில் தலைமை காவலர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தீயணைப்பு வீரர் முதல் மாவட்ட அலுவலர் வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல் நிலை சிறை காவலர் முதல் சிறை  கண்காணிப்பாளர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க் காவல் படையில் ஊர்க்காவல் படை வீரர் முதல் படை தளபதி வரையிலான 4 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும், விரல் ரேகைப் பிரிவு 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கு மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் 2 அலுவலர்கள் துணை இயக்குநர் மற்றும் அறிவியல் அலுவலர் ஆகியோருக்கும், அவர்களின் மெச்சத்தகுந்த பணியை அங்கீகரிக்கும் வகை யில் “தமிழ்நாடு முதல்வரின் அண்ணா பதக்கங்கள்” வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். மேலும், சாயல்குடி காவல்  சரக எல்லைக்குட்பட்ட பகுதி யில், கூட்டுப் பலாத்காரம் மற்றும் கொள்ளை குற்றத்தில்  சம்பந்தப்பட்ட இரண்டு தலை மறைவான குற்றவாளிகளை கைது செய்யும் பணியில் ஈடு பட்டபோது கே.நவநீத கிருஷ்ணன், உதவி ஆய்வாளர், தீவிர குற்ற தடுப்பு பிரிவு, ராம நாதபுரம் மாவட்டம், எதிரிகளால் கடுமையாக தாக்கப்பட்ட இடது தொடையில் பலத்த வெட்டு காயம் அடைந்த போதும், சற்றும்  தாழ்வில்லாமல் தனது தைரியம்  செயலினால் இரண்டு எதிரிகளை யும் கைது செய்ய உதவியாக இருந்துள்ளார். இந்த தாக்குதலில் தலைமைக் காவலர் கருப்பசாமி என்பவரின் உயிரை காப்பாற்ற மிகவும் உதவியாக இருந்துள்ளார். கே.நவநீத கிருஷ்ணன், உதவி ஆய்வாளரின் துணிச்சலையும், செயலையும் பாராட்டி அவருக்கு  காவல் துறையில் வீரதீர செயலுக் கான “தமிழ்நாடு முதல்வரின் அண்ணா பதக்கம்” வழங்கவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார். மேற்கண்ட பதக்கங்கள் முதல்வ ரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.