states

img

சத்தீஸ்கர் சாமியார் பரமாத்மானந்த் வெறிப்பேச்சு இந்துக்களை மதம் மாற்றினால் தலையை வெட்டுங்கள்!

சுர்குஜா, அக்.23- மதமாற்றம் செய்வதற்காக இந்துக்களின் வீடுகளுக்கு வரும் சிறுபான்மையினரின் தலையை வெட்டி வீசுங்கள் என்று சத்தீஸ்க ரைச் சேர்ந்த சாமியார் பரமாத்மா னந்த் வன்முறையைத் தூண்டி யுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா என்ற இடத்தில் கட்டாய மதமாற் றத்துக்கு எதிராக கண்டனக் கூட் டம் நடைபெற்றுள்ளது. பாஜக மாநிலத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட இந்தக் கூட் டத்தில்தான் சாமியார் பரமாத்மா னந்த் ஆவேசமாக பேசியுள்ளார். “நான் ஒரு துறவி. நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. இங்கே பேசிய ராம்விசார்ஜி கூறி யதை நான் சற்று விரிவாக சொல்ல நினைக்கிறேன். உங்கள் வீடு களில் தடிகளை வைத்திருங்கள். நம்முடைய கிராமங்களில் மக் கள் கைக் கோடாலிகளை வைத் திருக்கிறார்கள். எதற்காக இந்த கோடாலி வைத்திருக்கிறார்கள்? மதமாற்றம் செய்ய வருகிறவர் களின் தலையை வெட்டத்தான், இந்த கோடாலியை வைத்திருக்கி றார்கள். ஒரு சாமியராக இருந்து கொண்டு வெறுப்பை தூண்டும் பேச்சை பேசுவதாக என் மீது குற்றம் சாட்டலாம். சில நேரங்க ளில் தீயை பற்ற வைக்க வேண் டிய தேவையும் இருக்கிறதே... எனவே மீண்டும் சொல்கிறேன்.. உங்கள் வீடு, தெரு, கிராமம் எங் கேயாவது மதமாற்றம் செய்ய வருகிறவர்களைப் பார்த்தால் அவர்களுக்கு மன்னிப்பு எல்லாம் கொடுக்காதீர்கள்.. மதமாற்றம் செய்ய வருகிறவர்களை முத லில் தடுத்து நிறுத்துங்கள். அடுத்த தாக உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். பின்னர் கொன்று விடுங்கள்..!” என்று சாமியார் பர மாத்மானந்த் கூறியுள்ளார்.

;