states

ஒருவருக்கு தூக்குத் தண்டனை; 12 பேருக்கு ஆயுள்

கடலூர் கண்ணகி - முருகேசன் சாதி ஆணவக் கொலை

கடலூர், செப். 24- கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு நிகழ்ந்த கண்ணகி-முருகேசன் சாதி ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் சகோத ரருக்கு மரண தண்டனையும், துணைக் கண்காணிப்பாளர், ஆய்வாளர் மற்றும் பெண்ணின் உறவினர்கள் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கடலூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பளித்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள  குப்பநத்தம் புதுக்காலனி யைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் முரு கேசன்(25). தாழ்த்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த இவர் பி.இ (கெமிக்கல்) பட்டதாரி. அதேபகுதியில் வசித்த  வேறு சமூகத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி (22) என்ற பெண்ணை காதலித்து கடந்த 5-5-2003 அன்று பதிவு திருமணம் செய்து கொண்டார். எனினும், அவரவர் வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்த விவகாரம் வெளியில் தெரிந்த நிலையில் கண்ணகியை விழுப்புரத்திலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வந்தனர். எனினும், இத்திருமணத்தினால் தங்களது கவுரவம் பாதிக்கப்பட்டதாகக் கூறி  பெண்ணின் பெற்றோர் 8-7-2003 அன்று வண்ணாங்குடிகாட்டிலுள்ள மயா னத்தில் முருகேசன்-கண்ணகி ஆகியோ ரது வாய், காதில் விஷத்தை ஊற்றி, கிணற்றில் தலைகீழாகக் கயிறு கட்டி இறக்கி சித்ரவதை செய்து கொடூரமான முறையில் கொலை செய்து பின்னர் உடலை தனித்தனியாக எரித்தனர்.

மூடி மறைத்த காவல்துறை

இச்சம்பவம்  ஊடகங்கள் மூலமாக வெளிவந்த நிலையில் முருகேசனின் பெற்றோர் விருத்தாசலம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். அப்போது, காவல்துறை ஆய்வாளராக இருந்த மா.செல்லமுத்து (66) (தற்போது துணை கண்காணிப்பாளராகி ஓய்வு பெற்றவர்), உதவி ஆய்வாளராக இருந்த பெ.தமிழ் மாறன் (51) (தற்பொழுது ஊழல் வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்) ஆகியோர் சாதி ஆணவக் கொலையை மூடி மறைக்கும் நோக்குடன் செயல்பட்ட தோடு, முருகேசன், கண்ணகி தரப்பில் தலா 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வழக்கை முடித்து விட்டனர்.  

சிபிஎம்-பல்வேறு அமைப்புகள் போராட்டம்

ஆணவக் கொலை வழக்கு குற்றவாளி களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடலூர் மாவட்ட த்தில் போராட்டங்களை நடத்தின. இந்த நிலையில் இந்த வழக்கினை சிபிஐ விசாரணை நடத்த வேண்டு மென சாமிக்கண்ணு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன டிப்படையில், வழக்கு விசாரணை மேற் கொண்ட சிபிஐ , 9-3-2009 அன்று குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில், கண்ணகி-முருகேசன் ஆகியோரை சாதிய வன்கொடுமையால் கண்ணகி குடும்பத்தினர் ஆணவப் படுகொலை செய்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு உடந்தையாக முருகேசன் உற வினர்கள் 2 பேரும், அப்போதைய காவல்  ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோ ரும் இருந்ததாக அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த வழக்கு கடலூர் அமர்வு நீதிமன் றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தினசரி விசாரணை நடத்தும் வகையில் எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி எஸ்.உத்தமராசா வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வந்ததால் தீர்ப்பினை எதிர்பார்த்து ஏராளமானோர் நீதிமன்ற வளாகத்தில் கூடினர்.

இருவர் விடுதலை

வெள்ளியன்று காலையில், நீதிபதி தனது தீர்ப்பின் முதற்பாதியை வாசித் தார். அதில், முருகேசனின் உறவினர்கள் செ.அய்யாசாமி (61), பா.குணசேகரன் (59) ஆகியோர் மிரட்டப்பட்டு சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கு இக்கொலையில் சம்பந்தம் இல்லாததால் அவர்களை விடு தலை செய்வதாக அறிவித்தார். மீதமுள்ள 13 பேரும் குற்றவாளிகள் என்று அறி வித்தார். அதன்பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு ஒவ்வொருவருக்கு மான தண்டனை விபரத்தை அறிவித்தார். அதில், ஆணவக் கொலைக்கு முக்கிய காரணமாக விளங்கிய பெண்ணின் சகோ தரர் து.மருதுபாண்டியன் (49) என்பவ ருக்கு சாகும் வரையில் தூக்கிலிடும் மரண தண்டனையும், ரூ.4.65 லட்சம் அபராத மும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.

ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவு

மேலும், பெண்ணின் தந்தை சி.துரை சாமி (68), அவரது மகன் ரெங்கசாமி (45), உறவினர்களான கோ.கந்தவேலு (54), கோ.ஜோதி (53), இரா.மணி (66), இரா.தனவேல் (49), வை.அஞ்சாபுலி (47),  கா.ராமதாஸ் (52), ந.சின்னதுரை (50), வெங்கடேசன்(55) ஆகியோருக்கு கொலை மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் தலா 3 ஆயுள் தண்டனையும், தலா ரூ.4.15 லட்சம் அபராதமும் விதித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும், அப்போதைய காவல் ஆய்வாளர் மா.செல்லமுத்து (66), உதவி  ஆய்வாளர் பெ.தமிழ்மாறன் (51) ஆகி யோருக்கு எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்ட னையும் தலா ரூ.1.15 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும், இருவரும் தலா ரூ.3 லட்சத்தை பாதிக்கப்பட்ட முருகேசன் குடும்பத்தினருக்கு வழங்கவும் உத்தர விட்டார். இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் டொமினிக்விஜய், பாதிக்கப் பட்டவர் தரப்பில் வழக்கறிஞர் பெ.ரத்தி னம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இத னையடுத்து, தண்டனை விதிக்கப்பட்ட 13 பேரும் பலத்த பாதுகாப்புடன் கடலூர்  மத்தியச் சிறைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.

நீதிபதி வேதனை

சாதி கவுரவத்திற்காக மனித சமூகத் திற்கே களங்கத்தை ஏற்படுத்தும் வகை யில் இக்கொலை நடைபெற்றுள்ளது. தமிழ் மண்ணில் கண்ணகி எரித்துக் கொல்லப்பட்டதே கடைசியாக இருக்க வேண்டும் என்று தீர்ப்பினை வாசித்த போது நீதிபதி குறிப்பிட்டார். இந்த தீர்ப்பினை முன்னிட்டு கடலூரில் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். விருத்தாசலம் பகுதியிலும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

கடலூர் நீதிமன்றத்  தீர்ப்புக்கு சிபிஎம் வரவேற்பு!

சாதி ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தல்

சென்னை,செப்.24- கடலூர் சாதி ஆணவக் கொலையாளி களுக்கு தண்டனை அளித்த நீதிமன்றத் தீர்ப்பு க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. சாதி ஆணவப் படுகொலை களை தடுப்பதற்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கடலூர் மாவட்டம், விருத்தாசலத்திற்கு அருகில் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் 2003ஆம் ஆண்டு நடைபெற்ற கொடூரமான சாதி ஆணவக் கொலை மற்றும் எஸ்.சி /எஸ்.டி வன்கொடுமை வழக்கில் கடலூர் எஸ்.சி.,/  எஸ்.டி. நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பையும், தீர்ப்பினை வழங்கிய நீதிபதி எஸ்.உத்தமராஜ் அவர்க ளுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

பட்டியலின வகுப்பைச் சார்ந்த பொறியி யல் பட்டதாரி முருகேசன் என்பவருக்கும், அதே கிராமத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கண்ணகி என்பவருக்கும் காதல் ஏற்பட்டு 05.05.2003 அன்று பதிவு திருமணம் செய்து கொண்டனர். கண்ணகி யினுடைய உறவினர்கள் இவர்கள் இருவரை யும் தேடிக் கண்டுபிடித்து 8.7.2003 அன்று  ஊருக்கு கொண்டு வந்து கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். இருவரையும் பட்டப்பகலில் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று இருவருடைய வாயிலும், காதுகளி லும் விஷத்தை ஊற்றி அதிகாலை 5.30 மணி யளவில் படுகொலை செய்து பிணங்களை எரித்து விட்டனர். இத்தகைய கொடுமைகளிலிருந்து தங்களை விடுவித்து விடுங்கள் என அவர்கள் கதறி அழுதது யார் காதிலும் விழவில்லை. எங்களை பிரித்து கண்ணகியை வேறு யாருக்காவது திருமணம் செய்து கொடுத்து விடுங்கள் என்ற முருகேசனின் கதறலையும் செவி மடுக்காமல், ஏராளமானோர் திரண்டு நிற்க, அவர்கள் முன்னிலையில் இளம் தம்பதி யினரை கொடூரமாக கொலை செய்து தீ வைத்து கொளுத்திய கொடுமை அரங்கேற் றப்பட்டது.

இவ்வளவையும் செய்ததோடு காவல் துறையினரின் உதவியை பயன்படுத்தி முருகேசனுடைய தந்தை சாமிக்கண்ணு உள்ளிட்ட நான்கு பேர் முருகேசனை விஷம் கொடுத்து கொன்றதாகவும், கண்ணகியி னுடைய சகோதரர் மருதுபாண்டியன் உள்ளிட்ட நான்கு பேர் கண்ணகிக்கு விஷம் கொடுத்து கொன்றதாகவும் பொய் வழக்கு பதிவு செய்து எட்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், உண்மையான குற்றவாளி களை கைது செய்திடவும்,பொய் வழக்கினை ரத்து செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருத்தாசலம் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டமும், சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. முருகேச னுடைய தந்தை சார்பில் வழக்கறிஞர்கள் ரத்தினம் மற்றும் மனித உரிமை அமைப்பைச் சார்ந்தவர்கள் மூலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இவ்வழக்கு 22.04.2004 அன்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து வழக்கறிஞருடைய வற்புறுத்த லால் விசாரணையை மேற்கொண்ட சிபிஐ விசாரணை அதிகாரிகள் ஏற்கனவே பதிவு செய்த பொய் வழக்கை ரத்து செய்து கண்ணகி யினுடைய உறவினர்கள் 11 பேர் மீதும், பொய் வழக்கு போட்டு வழக்கை திசைதிருப்பவும், சாட்சிகளை மறைக்கவும் உதவி செய்த உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் மற்றும் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய இரண்டு போலீஸ் அதிகாரிகள் மீதும் கொலை வழக்கு, எஸ்.சி / எஸ்.டி வழக்கு பதிவு செய்து சிபிஐ நீதிமன்ற த்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதிலும் முருகேசனுடைய உறவினரான அய்யாசாமி, குணசேகரன் ஆகியோரை குற்றவாளிகளாக சேர்க்கக் கூடாது என்பதை சிபிஐ அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக செங்கல்பட்டு சிபிஐ நீதிமன்றத்திலும், கடலூர் எஸ்.சி / எஸ்.டி நீதிமன்றத்திலும் நடை பெற்றது. குற்றவாளிகள் வழக்கை நடத்த விடாமல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வந்த னர். சாட்சிகளை கலைப்பதற்கும் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டனர். குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு போலீஸ் அதிகாரிகளும் தமது முழு அதிகாரங்களை பயன்படுத்தி சாட்சி களை மிரட்டி கலைப்பதற்கு முயற்சித்தனர். இவர்களுக்கு அடிபணிந்து சிலர் பிறழ் சாட்சியாகவும் மாறினார்கள். செல்வராஜ் என்ற நேரடி சாட்சி இவர்களின் மிரட்டலால் பணிந்து நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதற்கு முதல் நாள் 31.08.2017 அன்று தற்கொலை செய்து கொண்டார். குற்றம் சுமத்தப்பட்டவர்களின் மிரட்டலால் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டார் என செல்வராஜின் மனைவி அளித்த புகாரின் மீது விருத்தாசலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போதுமான ஆதாரங்கள் இல்லை என விருத்தாசலம் காவல்துறை வழக்கை முடித்து விட்டது.

பல தடைகளை கடந்து செப்டம்பர் 24 அன்று கடலூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் கண்ணகியினுடைய சகோதரர் மருதுபாண்டியனுக்கு மரண தண்டனையும், மற்ற 12 பேருக்கு கிரிமினல் சதி செய்தது, கொலை செய்தது, வன்கொடுமை இழைத்தது என்கிற அடிப்படையில் மூன்று  ஆயுள் தண்ட னையும், உடந்தையாக இருந்து குற்றத்தை மூடி மறைக்க முயற்சித்த போலீசாருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. முருகே சனுடைய உறவினர் இரண்டு பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது. மேலும் அனைத்து குற்றவாளி களுக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் அபரா தம் விதித்ததோடு ஏற்கனவே காவல்துறை யினரால் பொய் வழக்கு புனையப்பட்டு கைது செய்யப்பட்ட முருகேசனின் உறவினர்கள் 3 பேருக்கு தலா இரண்டு லட்சம் இழப்பீடு  வழங்க வேண்டுமெனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். சாதிய வன்மத்தோடு நடத்தப்பட்ட ஆண வப்படுகொலை வழக்கு என்பதோடு எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழும் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது பாராட்டுக் குரியதாகும். இவ்வழக்கில் தொடர்ந்து கண்காணித்து உதவிய வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், கோ. சுகுமாறன் உள்ளிட்ட அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுக்களை தெரி வித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் தொடர்ந்து வரும் இத்தகைய ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த வும், குற்றவாளிகள் உரிய தண்டனை பெறவும் தமிழக அரசு ஆணவப்படுகொலை தடுப்புக் கென தனி சட்டத்தை நிறைவேற்ற வேண்டு மென கோருகிறோம். உசிலம்பட்டி விமலா தேவி ஆணவக் கொலை வழக்கில் நீதிபதி வி.ஆர்.சுப்பிரமணியம் வழங்கிய வழி காட்டுதல்களை அமல்படுத்த வேண்டுமென வும் முன்வைக்கிறோம். மேலும் அடித்தட்டு கிராமப்புற உழைப்பாளி மக்களான பட்டிய லின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சாதிய மோதல்களில் ஈடுபடாமல் தங்களது வாழ்வாதார பிரச்சனைகளுக்கு ஒன்றிணை ந்து போராட முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
 


 

;