சென்னை,ஜூன் 6- முதலீட்டாளர்களை சந்தித்து பேசுவதால் மட்டும் முதலீடுகள் கிடைத்துவிடாது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள கருத்திற்கு, அமைச்சர்கள் க.பொன் முடி, தங்கம் தென்னரசு, மா.சுப்பிர மணியன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பன்முக திறன் கொண்ட கல்வியை வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் உள்ளடக்கியதுதான் தேசிய கல்வி கொள்கை என்றும் தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்ப தற்கு உண்டான சாதகமான சூழலை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை ஹரி யானா மாநிலம் ஈர்த்து வருகிறது. முதலீட்டாளர்களை சந்தித்து கேட்பதாலோ அல்லது பேசுவதால் மட்டுமே முதலீடுகள் வந்துவிடாது” என்றும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்க ளிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, “ உயர்கல்வி துறையில் படிக்க மாணவர்கள் திறனை வளர்க்க நான் முதல்வன் திட்டம் கொண்டு வந்துள்ளோம். இதை சிங்கப்பூர் கல்வி அமைச்சரே பாராட்டி யுள்ளார். தமிழ்நாட்டில் கல்வி தரம் வளர வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளார். பத்திரிகையாவது ஆளுநர் ரவி படிக்க வேண்டும். அரசியல் வாதி போன்றும் எதிர்கட்சி தலைவர் போன்றும் பேசுவது வருந்தத்தக்கது”என்றார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்ன ரசு, “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி முழு நேர அரசியல்வாதியாக மாறி வருகிறார். துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசியல் பேசியுள்ளார். மாநாட்டை முழுக்க முழுக்க அரசி யலுக்காக பயன்படுத்தியுள்ளார்” என்றார். ஒன்றிய அரசின் தரவரிசை பட்டி யலில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழ் நாட்டில் உள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்கள் தர வரிசை பட்டியலில் தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் முன்னிலையில் உள்ளன. தமிழ் நாட்டில் கல்வி சூழல் சரியில்லை, வேலைவாய்ப்பு உருவாக்கப்பட வில்லை என பேசுவதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றை ஆளுநர் அறிந்துகொள்ளாமல் பேசு கிறார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பி டுகையில் கல்வி கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. அனைத்து கல்லூரிகளும் சிறந்து விளங்குகின்றன என்றும் அவர் கூறினார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் பேசி யதை ஏற்க முடியாது. முதல்வரின் ஜப்பான் பயணத்தின் மூலம் ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட் டுள்ளன. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழுகிறது. உகந்த சூழல் காரணமாக தமிழ்நாட்டை நோக்கி உலக முதலீட்டாளர்கள் படையெடுக்கிறார்கள். கல்வி, தொழில், வேலைவாய்ப்பில் உயர்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். மருத்துவ கலந்தாய்வு குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்கள் தான், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிப்பார்கள். இது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பொருந் தும்” என்றார்.