states

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்து : 9 பேர் பலி

காஞ்சிபுரம், மார்ச் 22- காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உரிமையாளர் உட்பட 9 பேர் பலியானார்கள். மேலும் 7 பெண்கள் உட்பட 16 பேர் படுகாயமடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், குருவிமலை அருகே வளத்தோட்டம் என்ற பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக பட்டாசு ஆலை  ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலைக்கு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை (மார்ச் 22) வழக்கம்போல் பணிக்குச் சென்றுள்ளனர். அப்போது பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடியின்  சத்தம் சுமார் 5 கி.மீட்டர் அளவுக்கு உண ரப்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் ஆலை யில் பணிபுரிந்து கொண்டிருந்த 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.  காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த தக வலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட  ஆட்சியர் ஆர்த்தி, காவல் கண்காணிப்பா ளர் சுதாகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட னர். இந்த சம்பவம் குறித்து வழக்கு ப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. பட்டாசு ஆலையின் உரிமையாளரின் உறவினர் சுதர்சனும் இந்த விபத்தில் பலியாகியுள்ளார்.