states

பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காமல் தொழிலாளர்களை பணி செய்ய வைப்பதா?

திருச்சிராப்பள்ளி, நவ.25- மாநகராட்சி துப்புரவு ஊழியர்களை வேறு பணிகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடு இல்லாமல் பயன்படுத்திய திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்து.  இதுதொடர்பாக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழக முதல்வர் திருச்சி வருகையை யொட்டி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் சென்டர் மீடியனில் தேங்கியுள்ள மண்ணை அகற்ற பல லட்சம் ரூபாயில் வாங்கிய இயந்திரங்களை பயன்படுத்தாமல், மாநக ராட்சி ஒப்பந்த ஊழியர்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், புதனன்று திருச்சி விமான  நிலையம் அருகே சென்டர் மீடியன் அருகில் தேங்கிய மண்ணை சுத்தம் செய்யும்  பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் செல்வி, குணசுந்தரி, மாரியப்பன் ஆகிய 3 பேர் மீது புதுக்கோட்டையிலிருந்து வந்த கார்  மோதியதில் படுகாயமடைந்தனர்.  இந்நிலையில், வியாழனன்று திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.ஐ.டி அருகில் வேலை செய்து கொண்டி ருந்த துப்புரவு ஒப்பந்த தொழிலாளி தட்சணா மூர்த்தி மீது கார் மோதியது. இதில் அவரது கால் எழும்பு உடைந்து, அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 3 பேர் படுகாயமடைந்த விபத்தை சுட்டிக்காட்டி நெடுஞ்சாலை துறை பணியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை ஈடுபடுத்தக் கூடாது என்றும், பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காமல் தொழி லாளர்களை பணி செய்ய வைத்த அதிகாரி கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் தொழிற்சங்கத்தினர் புகார் செய்திருந்தனர். இந்நிலையில், மீண்டும் அதே போல் ஒரு விபத்து ஏற்பட்டு தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.  மேலும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற  உறுப்பினர் எஸ்.சுரேஷ் தொடர்ந்து இது போல் மாநகராட்சி துப்புரவு ஊழியர்களை முக்கிய பிரமுகர் வருகையின் போது நெடுஞ்சாலைத்துறை செய்ய வேண்டிய பணிகளுக்கு அனுப்பக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.  எனவே, மாநகராட்சி துப்புரவு ஊழியர் களை, மாநகராட்சி தூய்மைப் பணிக்கு பயன்படுத்தாமல், வேறு பணிகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடு இல்லாமல் பயன்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  விபத்தில் படுகாயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் 4 தொழிலாளர்களுக்கும் உரிய சிகிச்சை, நிவாரணம் வழங்க வேண்டும். பழுதடைந்து நிறுத்தி வைத்துள்ள மண்ணை சுத்தம் செய்யும் இயந்திரத்தை சீர்செய்து பயன்படுத்திட திருச்சி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இச்சம்பவங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.