states

காவிரி மண்டலத்தில் தனியாருக்கு நிலக்கரி சுரங்கமா?

சென்னை,ஏப்.4- காவிரி வேளாண் பாதுகாப்பு மண்ட லத்தில் தனியாருக்கு நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதியளித்த ஒன்றிய அர சின் அடாவடித்தனத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாட்டில் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா பகுதிகளில் மீத்தேன் மற்றும் ஷேல் எரிவாயு எடுப்பதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்த பிறகு ஒன்றிய அரசு அதை கைவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு கனிம வளங்கள் அவசியம் தான். அதேசமயம், விவசாயத்தை அழித்து கனிம வளம் எடுப்பது உணவுப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விடும் என்கிற காரணத்தினால்தான் தமிழ்நாடு சட்ட மன்றமே தீர்மானம் நிறைவேற்றியது. அதன் பிறகு அப்பகுதி பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப் பட்டது. அனைத்தும் தனியார்மயம் என்கிற குறிக்கோளோடு செயல்பட்டுக் கொண்டி ருக்கும் பாஜக அரசாங்கம், விமான நிலை யம், துறைமுகம், என்.ஐ.நிறுவனம், எல்.ஐ.சி., தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே நிலையங்கள், ரேசன் கடைகள் என்று ஒவ்வொன்றையும் தனது கூட்டாளி களுக்கு விற்பதை தாரக மந்திரமாக  கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக் கிறது.

இதன் தொடர்ச்சியே தற்போது  டெல்டா மாவட்டங்களில் சேத்தியார் தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி ஆகிய  பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் கொடுத்துள்ளது. இது தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களை கடுமையாக பாதிப்பதோடு, உணவுப் பாதுகாப்பையும், விவசாயிகள் மற்றும் அனைத்து கிராமப்புற மக்கள் வாழ்வாதாரத்தை பாதித்து இம்மக்க ளை ஓட்டாண்டியாக்கி விடும்.  தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி இதை செயல்படுத்துவது மாநில உரிமையை மீறிய செயலாகும். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இதனை வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, ஒன்றிய அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்துகிறது. இதை தொடரும் பட்சத்தில் அனைத்து ஜனநாயக இயக்கங்களும் இணைந்து இதனை முறியடிக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக டெல்டா மாவட்டங்களை சீரழிக்கும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை தடுத்துநிறுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.