சாகர், (மத்தியப்பிரதேசம்), ஜூலை 29- மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரில் உள்ள ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் ஜிதேந்திர அஹிர்வார் என்பவர் 39 மாணவர் களுக்கு ஒரே சிரிஞ்சைப் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சாகர் மாவட்ட (பொறுப்பு) ஆட்சியரிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மாவட்ட தலைமை சுகாதார அதிகாரியை விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் மாணவர்களின் பெற்றோர், சம்பந்தப்பட்ட நபர் ஒரே தடுப்பூசி பயன்படுத்தியதாக கோஸ்வாமி யிடம் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப் கடையில் கோபால் கஞ்ச் காவல்துறை யினர் அஹிர்வார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.