states

தொடக்கக்கல்வித் துறையில் ஒப்பளிப்பு பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம்

சென்னை,ஜூலை 21- தொடக்கக் கல்வி துறைக்கு ஒப்ப ளிப்பு செய்யப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங் களாக மாற்றியமைக்கப்பட்டு, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை வருமாறு:  குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இன் படி அனைவருக்கு கல்வித் திட்டத்தின் கீழ் 2011-12 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு களுக்கு நியமனம் செய்ய 1282 பட்டதாரி ஆசிரியர் பணியிடங் கள் மற்றும் தொடக்கக் கல்வித்துறை யின் கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளி களில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக் கும் நியமனம் செய்ய 1581 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிட ங்கள் என மொத்தம் 6428 ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை செயலா ளர் மற்றும் துறைத்தலைவர்கள் ஆகி யோரை உறுப்பினர்களாக கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் கடந்த 9.2.2024 இல் நடைபெற்ற கூட்டத்தில் தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியிடங்களாகவுள்ள 5146 ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி யமைத்திடவும், ஐந்தாண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள 16 இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை புத்தாக்கம் செய்து நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யவும் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. அதன்படி 10 ஆண்டு களுக்கு மேல் தற்காலிக பணியிடங் களாக உள்ள 3549 இடைநிலை ஆசி ரியர்கள் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்தும், ஐந்தாண்டுகளுக்கு மேல் நிரப்பப்  படாமல் உள்ள 16 இடைநிலை ஆசிரி யர் பணியிடங்களை புத்தாக்கம் செய்து நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அமைத்திடவும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.