பெங்களூரு, ஜன.11- கர்நாடகத்தில் அனைத்துத் துறை யிலும் ஊழல் மலிந்து விட்டதாகவும், மாநில அரசு 20 ஆண்டுகள் பின் னோக்கிச் சென்று விட்டதாகவும் காங்கி ரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஆகியோர் பாஜக அர சுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் அடங் கிய அறிக்கையை வெளியிட்டு கூட் டாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறி யிருப்பதாவது: “கர்நாடக காங்கிரஸ் சார்பில் பாஜக ஆட்சியின் பாவ புராணங்கள் பெய ரில் குற்றச்சாட்டுகள் அடங்கிய அறிக் கையை வெளியிட்டுள்ளோம். கர்நாட கத்தில் முறைகேடான வழியில் பாஜக ஆட்சிக்கு வந்தது. இது சட்டவிரோத மான அரசு. கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்த லில் பாஜக-வுக்கு மக்கள் பெரும் பான்மை பலத்தை வழங்கவில்லை. 104 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. பாவத்தால் ஈட்டிய பணத்தை கொண்டு எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வந்தனர். இது ஊழல் மூலம் சம்பாதித்த பணம் ஆகும். பாஜக தற்போது ஊழலில் மூழ்கியுள்ளது. பசவராஜ் பொம்மை முதல்வராக வந்த பிறகு கர்நாடகத்திற்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அவர் ஒரு பலவீனமான முதல்வர். ஒன்றிய அரசு சொல்படி அவர் நடந்து கொள்கிறார். முதல் 2 ஆண்டுகள் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது ரூ. 3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்தது. அதுபற்றி நாங்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசினோம்.
15-ஆவது நிதி ஆணையம் கர்நாட கத்திற்கு ரூ. 5,495 கோடி வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதை ஒன்றிய அரசு வழங்கவில்லை. இந்த நிதி யை எடியூரப்பாவோ அல்லது பசவராஜ் பொம்மையோ கேட்டுப் பெறவில்லை. கர்நாடகத்தில் இருந்து ஒன்றிய அர சுக்கு ஆண்டுக்கு வரியாக ரூ. 3.5 லட்சம் கோடி செல்கிறது. ஆனால் ஒன்றிய அரசு கர்நாடகத்திற்கு வழங்கிய நிதி மிகக் குறைவாக உள்ளது. இதன் கார ணமாக கடன் வாங்க வேண்டிய நிலைக்கு கர்நாடகம் தள்ளப்பட்டுள் ளது. தற்போது கர்நாடகத்தின் கடன் ரூ. 5.40 லட்சம் கோடியாக அதிகரித்துள் ளது. இந்த கடனை அடைக்க மாநில அரசு அசலுடன் வட்டியும் சேர்த்து ஆண்டுக்கு ரூ. 43 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும். இதனால் மாநி லத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. கன்னடர்கள் ஒவ்வொருவர் மீதும் ரூ. 86 ஆயிரம் கடன் உள்ளது. பாஜக அரசு, 40 சதவிகித கமி ஷனை லஞ்சமாக பெறுவதாக ஒப்பந்த தாரர்கள் குற்றம்சாட்டினர். வரலாற்றில் முதல் முறையாக பிரதமர் மோடிக்கு ஒப்பந்ததாரர்கள் கடிதம் எழுதினர். இதற்கு மோடி இதுவரை பதிலளிக்க வில்லை. அத்துடன் அரசு பணி நியம னங்கள், பணி இடமாறுதல், பதவி உயர்வு போன்ற விஷயங்களுக்கும் லஞ்சம் வாங்குகிறார்கள். இந்த அரசு அலிபாபாவும், 40 திருடர்களும் என்ற ரீதியில் செயல்படுகிறது. பாஜக ஆட்சி யில், கர்நாடகம் வளர்ச்சியில் 20 ஆண்டு கள் பின்னோக்கி சென்றுவிட்டது. அத னால் நாங்கள் இந்த அரசுக்கு எதி ராக குற்ற அறிக்கையை வெளி யிட்டுள்ளோம்.
2018 தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானதை மறந்து விட்டு, 40 சத விகித கமிஷன் மூலம் கொள்ளைய டிப்பதில் பாஜக மும்முரமாக ஈடு பட்டுள்ளது. பாஜக அரசாங்கத்தால் மக் கள் சலிப்படைந்துள்ளனர். மேலும் வெறுப்பு அரசியல் மற்றும் பழிவாங்கும் அரசியலால், மக்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில் அரசு தோல்வி யடைந்துள்ளது. 40 சதவிகித கமிஷ னில் மட்டுமே பாஜக அரசு கவனம் செலுத்துவதால், தொற்றுநோய்களின் போது, 3.5 லட்சத்திற்கும் அதிகமான கன்னடர்கள் இறந்தனர். மேலும் அப் பாவி ஒப்பந்தக்காரர்கள் தற் கொலைக்கு தள்ளப்பட்டனர். முதல்வர் பசவராஜ் பொம்மை பாஜக-வின் உயர் தலைமையின் கைகளில் பொம்மை யாக செயல்படுகிறார். கர்நாடகத் தின் அபிலாஷைகள் புறக்கணிக்கப் பட்டுள்ளன. கன்னடர்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.