states

ஐஐடி இயக்குநர் காமகோடியை பதவி நீக்குக!

சென்னை, ஜன. 20 - சென்னை ஐஐடி இயக்குநர் பொறுப்பி லிருந்து, காமகோடியை நீக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் கல்வித்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: ஐஐடி இயக்குநரா, ஆர்எஸ்எஸ்காரரா? மிக உயர்ந்த தொழில்நுட்பக் கல்வி மையத்தின் இயக்குநரான காமகோடி, கோமியம் குறித்து பெருமை பொங்கப் பேசுவது மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கவே உதவும்.  இது ஐஐடி போன்ற  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மீதும், அறிவியல் கண்ணோட்டங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இழக்க செய்யவும், மூடநம்பிக்கையை வளர்க்கவும் உதவும். ஐஐடி இயக்குநரா, ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரா? என வேறுபாடு தெரியாத அளவிற்கு சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியின் சொல்லும் செயலும் வெளிப்பட்டு வருகிறது. நீண்டகாலமாக நடக்கும் இந்துத்துவா அரசியல் ஏற்கெனவே, காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெய ரில் பாஜக அரசியலுக்கான செயல்பாட்டு களமாக ஐஐடி நிறு வனத்தை அனுமதித்தார். சென்னை ஐஐடி வளா கத்தில் இந்துமதம் அல்லாத பிற மத அடை யாளம் கொண்டோர்- சமூக நீதி காரணமாக இட ஒதுக்கீடு  அடிப்படையில் சேர்ந்தோர்- பாரபட்சமாக நடத்தப்பட்டனர் என்பது வெளிச்சத்திற்கு வந்த உண்மை. இயக்குநரின் வெளிப்படையான ஆர்எஸ்எஸ் ஆதரவுப் பிரச்சாரம் மேற்படி பாரபட்சத்தை அதிகரிக்கும். கால்நடை ஆய்வாளர்களும் கண்டன அறிக்கை பிரதமர் மோடி அறிவியல் மாநாட்டை துவக்கி வைக்கும் உரையில், ‘விநாயகர் உருவம் தான் முதல் குளோனிங்’ என பேசினார். இது  வலுவாக எதிர்க்கப்பட்டது. அவர், தற்போது கோசாலை விழாவில் உடல் உபாதைகள் மற்றும் காய்ச்சல் போன்ற பல நோய்களுக்கு கோமி யம் அற்புதமான மருந்து என உரையாற்றி இருப்பது, கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல.  கோமியம் உடல் நலத்திற்கு தீங்கானது என இந்திய கால்நடை நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, உடனடியாக இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடி நீக்கப்பட  வேண்டும். மேலும் இவ ருக்கு வழங்கிய முனைவர் பட்டம் உள்ளிட்ட பட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டியவை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. ஆர்எஸ்எஸ் மையமாக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது மேலும் பாஜக ஆட்சியானது, ஆய்வு நிறு வனங்களை, இதர தன்னாட்சி நிறுவனங்களை ஆர்எஸ்எஸ் மையங்களாக மாற்றி வருகிறது என குற்றம் சாட்டியது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், காமகோடி ஆர்எஸ்எஸ் பிரச்சாரத்தை, சென்னை ஐஐடி இயக்குநர் அந்தஸ்த்தை பயன்படுத்தி செய்வது, தமிழ் நாட்டின் ஜனநாயக சூழலுக்கு ஆபத்தானது.  எனவே, சென்னை ஐஐடி இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்கி உரிய விசாரணை நடத்திட வேண்டும் என  ஒன்றிய கல்வித்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் தமது அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.