காமன்வெல்த் விளையாட்டு போட்டி: இந்திய அணியினருக்கு முதல்வர் பாராட்டு
சென்னை, ஆக. 9- காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பர்மிங்காம் காமன் வெல்த் போட்டியில் இந்தியா வின் பதக்கக்காரனாகி விட்ட சரத் கமல், சத்தியன் ஞானசேகரன், தீபிகா பல்லி கல், இந்தியாவின் பெருமை பி.வி.சிந்து, ஆற்றல்மிகு லக்ஷயா சென், ஆதிக்கமிகு நிக்கத் சரீன், இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர், மகளிர் கிரிக்கெட் அணியினர் உள்ளிட்ட, நாட்டுக்காகத் தங்களது முழு உழைப் பையும் அளித்த அனைத்து விளை யாட்டு வீரர்களுக்கும் எனது பாராட்டு கள். இனி வருபவையாவும் இதை விடச் சிறப்பானவையாக மட்டுமே இருக்கும். தங்களது எதிர்கால முயற்சி களில் வெற்றிபெற எனது வாழ்த்து கள். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, ஆக. 9 - தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி உள் ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், புதன்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், வடதமிழக கட லோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத் துடன் காணப்படும்.
கள்ளக்குறிச்சி வன்முறை: 77 பேருக்கு ஜாமீன்
விழுப்புரம், ஆக. 9 - கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியா மூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல் ்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். மாணவி சாவுக்கு நீதி கேட்டு போராட்டம் நடந்த போது வன்முறை ஏற்பட்டது. அதில் பள்ளியில் உள்ள பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதையடுத்து சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப் பட்ட 236 பேர் ஜாமீன் கோரி விழுப்பு ரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் முதற் கட்டமாக கல்லூரி மாணவர்கள் 77 பேருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்ற நீதிபதி பூர்னிமா உத்தர விட்டார்.